News March 11, 2026

திண்டுக்கல்லில் துணிகர சம்பவம்!

image

வேடசந்தூர் அருகே விட்டல்நாயக்கன்பட்டியில் ஹோட்டல் உரிமையாளர் தொட்டியப்பனிடம் இருந்து 3 பவுன் தங்க நகை, 2 செல்போன்களை பறித்த வழக்கில் சேனன்கோட்டை சேர்ந்த பால்பாண்டி மற்றும் அவரது மகன்கள் சதீஷ்குமார், சந்தோஷ்குமார் ஆகிய 3 பேரை வேடசந்தூர் போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 3 பவுன் தங்க நகை பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Similar News

News March 11, 2026

வத்தலக்குண்டு: தட்டித்தூக்கிய அதிமுக Ex அமைச்சர்!

image

வத்தலக்குண்டு மற்றும் பட்டிவீரன்பட்டி பகுதிகளை சேர்ந்த ஓ.பி.எஸ். ஆதரவாளர்களான ரத்தினம், முத்துச்சாமி, மணிப்பிள்ளை, ஓ.இளங்கோவன் மற்றும் சதீஷ்குமார் ஆகியோர் தலைமையில் அதிமுகவில் இணையும் விழா நடைபெற்றது. இந்நிகழ்வில், அதிமுக துணைப் பொதுச்செயலாளரும் முன்னாள் அமைச்சருமான இரா. விஸ்வநாதன் முன்னிலையில் அவர்கள் தங்களை அதிமுகவில் இணைத்துக் கொண்டனர்.

News March 11, 2026

திண்டுக்கல்: ரூ.2,40,000 சம்பளத்தில் வேலை ரெடி! APPLY NOW

image

திண்டுக்கல் மக்களே, HPCL (இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட்) நிறுவனத்தில் காலியாக உள்ள 730 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. 18 – 45 வயதுகுட்பட்ட Diploma, Any Degree, B.E/B.Tech படித்தவர்கள் மார்ச் 25க்குள் <>இங்கு க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்க வேண்டும். இதற்கு சம்பளம் ரூ.30,000 – 2,40,000 வரை சம்பளம் வழங்கப்படும். எழுத்துத் தேர்வு அடிப்படையில் தகுதியான நபர்கள் நியமனம் செய்யப்படுவர். SHARE IT.

News March 11, 2026

பழனி அருகே உடல் கருகி பரிதாப பலி!

image

பழனி அருகே கணக்கம்பட்டி பகுதியை சேர்ந்தவர் சிவமணி (80). இவர் வீட்டில் அவர் தனியாக வசித்து வந்தார். இந்நிலையில் நேற்று காலை அந்த வீட்டில் திடீரென தீப்பிடித்தது. இதைக் கண்ட அக்கம்பக்கத்தினர் உடனடியாக தீயை அணைக்க முயற்சி செய்தனர். கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, தீயில் கருகி சிவமணி எரிந்த நிலையில் இறந்து கிடந்தார். இதுகுறித்து தகவலறிந்த பழனி ஆயக்குடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!