News August 2, 2024
திண்டுக்கல்லில் தாய்ப்பால் வார விழா

திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் தாய்ப்பால் வார விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவிற்கு குழந்தைகள் நல சிகிச்சை தலைமை மருத்துவர் திருநாவுக்கரசு தலைமை தாங்கினார். மேலும், தலைமை மருத்துவர் குணா முன்னிலை வகித்தார். இதில், தாய்ப்பாலின் நன்மைகள் மற்றும் அவசியம் குறித்து மருத்துவர்கள் எடுத்துரைத்தனர். இந்த விழாவில் மகப்பேறு மருத்துவர்கள், செவிலியர்கள், தாய்மார்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Similar News
News September 19, 2025
திண்டுக்கல்: இரவு நேர ரோந்து காவலர்கள் விவரம்

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை இன்று இரவு 11 மணி முதல் வெள்ளிக்கிழமை மாலை 6 மணி வரை நிலக்கோட்டை, பழனி, ஒட்டன்சத்திரம், கொடைக்கானல் மற்றும் வேடசந்தூர் ஆகிய பகுதிகளில் தீவிர ரோந்து பணிகள் நடைபெற்று வருகின்றன. பொதுமக்கள் அவசர தேவைகளுக்கு காவல் துறையின் தொலைபேசி எண்கள் மூலம் தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
News September 18, 2025
திண்டுக்கல்: ரூ.25,000 சம்பளத்தில் வேலை! APPLY NOW

திண்டுக்கல்லில் செயல்பட்டு வரும் தனியார் நிறுவனத்தில் உள்ள 30, Marketing Executive பணியிடங்களை நிரப்ப, தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வாயிலாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. டிகிரி முடித்திருந்தால் போதும், மாத ஊதியமாக ரூ.15,000 – ரூ.25,000 வழங்கபடும். மேலும் விவரங்களுக்கு மற்றும் விண்ணப்பிக்க <
News September 18, 2025
திண்டுக்கல்லில் நாளை விழிப்புணர்வு கண்காட்சி!

திண்டுக்கல்: மேற்கு ரோட்டரி சங்கம் சார்பில் மாபெரும் இலவச விழிப்புணர்வு நாணயக் கண்காட்சி ஆனது நாளை(செப்.19) முதல் செப்.21 ஆம் தேதி வரை மூன்று நாட்கள் நந்தவனம் ரோட்டில் உள்ள தரகு மண்டி குமஸ்தா மண்டபத்தில் காலை 10.30 மணி அளவில் நடைபெறுகிறது. இந்நிகழ்விற்கு சிறப்பு விருந்தினராக திண்டுக்கல் மேயர் இளமதி ஜோதி பிரகாஷ் பங்கேற்க்கிறார்