News September 10, 2025

திண்டுக்கல்லில் தலை நசுங்கி கோர விபத்து!

image

திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகே மெங்கிள்ஸ் ரோடு பகுதியில் இருசக்கர வாகனம் மீது தனியார் பேருந்து மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் இரு சக்கர வாகனத்தில் கணவர் ஆர்.எம்.காலனியைச் சேர்ந்த பழனியப்பன் பின்னால் அமர்ந்து வந்த மனைவி விஜயா(65) மீது பேருந்தின் சக்கரம் ஏறியதால் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார். இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Similar News

News September 10, 2025

திண்டுக்கல்: மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை ஏல அறிவிப்பு!

image

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி, நிலக்கோட்டை, ஒட்டன்சத்திரம், ஆத்தூர், நத்தம் ஆகிய தாலுகாக்களில் உள்ள 15 குளங்களின் மீன்பிடி உரிமையை 3 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு விட மின்னணு ஒப்பந்தப்புள்ளிகள் வரவேற்கின்றன. இதுகுறித்த மேலம் விவரங்களுக்கு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை, உதவி இயக்குநர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.

News September 10, 2025

திண்டுக்கல் மாவட்ட ஆசிரியர்கள் கவனத்திற்கு

image

தமிழ்நாட்டில் ஆசிரியர் தகுதி தேர்வுக்கான (TET) ஆசிரியர் தகுதி இன்றே(செப்.10) கடைசி நாள் என தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. இந்த தேர்வை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்ப முகவரி http://trb.in.gov.in என்ற ஆன்லைன் முகவரியில் இன்று 5 மணிக்குள் இடைநிலை ஆசிரியர்கள், பி. எட் இறுதியாண்டு படிப்பவர்கள் கூட விண்ணப்பிக்கலாம் என அறிவித்துள்ளது.

News September 10, 2025

திண்டுக்கல்: சிறுமியை கர்ப்பமாக்கியவர் கைது!

image

திண்டுக்கல்: வடமதுரை அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமியுடன் நெருங்கி பழகி, அவரை கர்ப்பமாக்கியதில் குழந்தையும் பிறந்தது. இது குறித்து வடமதுரை அனைத்து மகளிர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த அய்யலூர் அருகே உள்ள சித்துவார்பட்டி, வடுகபட்டியை சேர்ந்த திருப்பதி (35) என்பவரை போக்சோவில் கைது செய்தனர்.

error: Content is protected !!