News January 24, 2025

திண்டுக்கல்லில் இரவு நேர ரோந்து காவலர்கள் விவரம்

image

திண்டுக்கல்லில் இன்று (23-01-2025) இரவு 11 மணி முதல் நாளை வெள்ளிக்கிழமை காலை 6 மணி வரை காவல் துறையினர் நிலக்கோட்டை, பழனி, ஒட்டன்சத்திரம், கொடைக்கானல், வேடசந்தூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அதற்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு அட்டவணையில் உள்ள எண்ணை அழைக்கவும் என காவல் துறை தெரிவித்துள்ளது. 

Similar News

News December 28, 2025

ஆத்தூர் அருகே சம்பவ இடத்திலேயே பெண் பலி!

image

ஆத்தூர் அருகே செட்டியபட்டியைச் சேர்ந்த விஜய், தன் மனைவி கவிதா மற்றும் இரு பெண் குழந்தைகளுடன் இருசக்கர வாகனத்தில் பழனிக்குச் சென்றார். ஒட்டன்சத்திரம் நான்கு வழிச்சாலையில் சென்றுக்கு கொண்டு இருக்கும் போது எதிர்பாரத விதமாக கார் ஒன்று விஜய் பைக் மீது மோதியது. இதில் கவிதா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த விபத்தில் குழந்தைகள் உட்பட 6 பேர் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

News December 28, 2025

திண்டுக்கல்: வாடகை வீட்டில் இருப்பவரா நீங்கள்?

image

திண்டுக்கல் மக்களே வாடகைக்கு குடியேற்பவர்கள் இதை தெரிந்து கொள்ளுங்கள். ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை உயர்த்த வேண்டும். 2 மாத வாடகையை மட்டுமே அட்வான்ஸ் தொகையாக கேட்க வேண்டும். 11 மாதங்களுக்கு மேற்பட்ட குத்தகை ஒப்பந்தங்கள் சட்டப்படி பதிவு செய்யப்பட வேண்டும். வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன் அறிவிப்பு தர வேண்டும். இதை மீறுபவர்களை அதிகாரிகளிடம் (1800 599 01234) புகார் செய்யலாம். (SHARE பண்ணுங்க)

News December 28, 2025

மைக்கேல்பாளையம் முகாமில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

image

மைக்கேல்பாளையத்தில் நடைபெற்ற வாக்காளர்கள் பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம், திருத்தம் மற்றும் வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை பெறுவதற்கு நடைபெற்ற சிறப்பு முகாமில், மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சி தலைவர் செ. சரவணன், வாக்காளர் பட்டியலில் புதிதாக சேர்க்கக்கோரி பூர்த்தி செய்து வழங்கப்பட்ட படிவத்தை பெற்றுக்கொண்டார்.

error: Content is protected !!