News January 24, 2026
திண்டுக்கல்லில் இரண்டாவது முறையாக கொள்ளை! அதிர்ச்சி

திண்டுக்கல் அருகே பாலகிருஷ்ணாபுரம் கோவிந்தராஜ் நகரைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் அருளானந்த் சென்னை சென்றுள்ள நிலையில், பூட்டியிருந்த அவரது வீட்டில் மர்ம நபர்கள் கொள்ளையடித்துள்ளனர். கடந்த 2018-லும் இவர் வீட்டில் கொள்ளை நடந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது எவ்வளவு மதிப்புள்ள பொருட்கள் திருடு போயின என்பது குறித்து தாலுகா போலீசார் தீவிர விசாரணை நடத்தி மர்ம நபர்களைத் தேடி வருகின்றனர்.
Similar News
News March 12, 2026
திண்டுக்கல்: இரவு ரோந்து காவலர்கள் விவரம்

திண்டுக்கல் மாவட்டத்தில் நேற்று (மார்ச் 11) இரவு முதல் இன்று காலை வரை ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தாங்கள் அவசர நிலை ஏற்பட்டால் தாங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக தொடர்பு கொள்ளலாம். அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News March 11, 2026
திண்டுக்கல்லில் இலவச வீடு வேண்டுமா? APPLY NOW

ஏழைகளின் வீடு கட்டும் கனவை நிறைவேற்றும் வகையில் மத்திய அரசு ‘பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா’ திட்டத்தின் மூலம் வீடு கட்டுவதற்கு ரூ.2.67 லட்சம் வரை மானியமாக வழங்குகிறது. இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் https://pmaymis.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க ஆதார், வங்கி கணக்கு விவரம், பட்டா, சிட்டா, வருமானச் சான்று ஆகியவை முக்கியம் ஆகும். (SHARE)
News March 11, 2026
திண்டுக்கல்: உங்க பெயரில் நிலம் இருக்கா? செக் பண்ணுங்க!

திண்டுக்கல் மக்களே நில உரிமையாளர்கள் சிட்டா, புலப்படம் (FMB) மற்றும் அடங்கல் ஆகியவற்றைத் தனித்தனியாகப் பதிவிறக்கம் செய்வதற்குப் பதிலாக, இனி <


