News February 13, 2026
திண்டிவனம்: அரசு அதிகாரி அதிரடி கைது!

திண்டிவனம் அருகே நாரேரிக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஹரிகிருஷ்ணன்(29). விவசாயியான இவர், தனது புதிய வீட்டிற்கு மின் இணைப்பு பெற வணிக ஆய்வாளர் ரேகாவை(40) அணுகினார். அவர், அதற்கு ரூ.4 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார். இதுகுறித்து லஞ்ச ஒழிப்புத் துறையிடம் புகார் அளித்ததை அடுத்து, ரசாயன பொடி தடவிய ரூபாய் நோட்டுகளை வைத்து அதிகாரியை போலீசார் கையும் களவுமாக கைது செய்தனர். அவரை பணியிடை நீக்கம் செய்துள்ளனர்.
Similar News
News February 18, 2026
விழுப்புரம்: போலீசார் சோதனையில் சிக்கிய இளைஞர்

முருக்கேரியில், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சதீஷ் தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்ட னர். அப்போது மரக்காணத்தில் இருந்து பிரம்மதேசம் நோக்கி ஸ்கூட்டரில் வந்த வாலிபரை நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர். அந்த ஸ்கூட்டரில் 60 புகையிலை பாக்கெட்டுகள் இருந்தன. விசாரணையில், அவர் வன்னிப்பேர் கிராமத்தை சேர்ந்த சூரியமூர்த்தி மகன் பிரசாந்த் (32) என்பது தெரிந்தது. இதையடுத்து பிரசாந்தை போலீசார் கைது செய்தனர்.
News February 18, 2026
விழுப்புரம்: போலீசார் சோதனையில் சிக்கிய வாலிபர்

விழுப்புரம் மாவட்டம், பிரம்மதேசம் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மரக்காணத்திலிருந்து பிரம்மதேசம் நோக்கி வந்த ஸ்கூட்டரில் வேகமாக வாலிபர் வந்தார். அந்த வாலிபரை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது பிரசாத் என்ற வாலிபர் புகையிலை பொருட்களை விற்பனைக்காக கடத்திச் செல்வது தெரியவந்தது. தொடர்ந்து அந்த வாலிபரை போலீசார் கைது செய்து, புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.
News February 18, 2026
விழுப்புரம்: தவறி கீழே விழுந்து ஒருவர் பலி

திண்டிவனம் அடுத்த கூட்டேரிப்பட்டை சேர்ந்தவர் இளங்கோவன், இவர் கடந்த 7ஆம் தேதி சைக்கிளில், வீடூர் அணை அருகே சென்ற போது நிலைதடுமாரி கீழே விழுந்தார். அவரின் வீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, சிகிச்சை பலனளிக்காமல் நேற்று இவர் உயிரிழந்தார் விக்கிரவாண்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்தனர்.


