News January 31, 2026
திண்டிவனத்தில் போதை மாத்திரை வைத்திருந்தவர் கைது!

திண்டிவனம் செஞ்சி பேருந்து நிறுத்தத்தில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, சந்தேகத்தின் பேரில் நின்றிருந்த கப்பை கிராமத்தைச் சேர்ந்த அன்புசெல்வன் (24) என்பவரைப் பிடித்து விசாரித்தனர். சோதனையில் அவரிடம் போதை தரக்கூடிய 100 மாத்திரைகள், 2 சோடியம் குளோரைடு பாட்டில்கள் மற்றும் 5 ஊசிகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவற்றை பறிமுதல் செய்த திண்டிவனம் போலீசார், வாலிபரைக் கைது செய்தனர்.
Similar News
News February 1, 2026
ஓமந்தூர் பி.ராமசாமி ரெட்டியார் 132-வது பிறந்தநாள் விழா!

திண்டிவனம் வட்டம், ஓமந்தூரில், செய்தி மக்கள் தொடர்புத்துறை கட்டுப்பாட்டில் உள்ள அரசு மணிமண்டபத்தில், சென்னை மாகாணம் முன்னாள் முதலமைச்சர் ஓமந்தூர் பி.ராமசாமி ரெட்டியார் 132-வது பிறந்த நாள் கொண்டப்பட்டது. பி.ராமசாமி ரெட்டியார் உருவச் சிலைக்கு ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான், இன்று (பிப்.01) மலர்மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
News February 1, 2026
விழுப்புரம்: காலி இடம் இருக்கா; அரசு வழங்கும் ரூ.50,000 – APPLY..!

தமிழக அரசு எரிசக்தி உற்பத்தியை பெருக்கவும் காலி இடங்களுக்கு வருமானம் கிடைக்கவும் இந்தத் திட்டத்தை தொடங்கியுள்ளது. ரூ.20,000 – 50,000 வரை ஏக்கருக்கு வருடத்திற்கு கிடைக்கும்.
1.<
2. நில உரிமையாளர் என்பதை தேர்ந்தெடுங்க
3. நிலத்தின் மாவட்டம், வட்டம், கிராமம் மற்றும் சர்வே எண், FMB ஆகியவற்றை பதிவு செய்யுங்க. உங்களை அதிகாரிகளை தொடர்பு கொள்வார்கள். மற்றவர்களுக்கு SHARE பண்ணுங்க..
News February 1, 2026
விழுப்புரம்: ரவுடி கொலை வழக்கில் 6 பேர் கைது!

விழுப்புரம் மாவட்டம், கோட்டக்குப்பம் அடுத்த சின்னகோட்டக்குப்பம் எம்.ஜி.ஆர். நகரைச் சேர்ந்தவர் அப்பு (எ) ஜவகர், ரவுடி. இவர் முன்விரோதம் காரணமாக கடந்த 28ம் தேதி, கோட்டக்குப்பம் அருகே 10 பேர் கொண்ட கும்பலால் வெட்டி கொலை செய்யப்பட்டார்.அதனைத் தொடர்ந்து இந்த கொலை வழக்கில் தொடர்புடைய புதுச்சேரி சாமிப்பிள்ளைத்தோட்டம் ஹேமத்குமார், அவரது சகோதரர் வசந்த், கிரி தமிழ்மணி கோகுல் உள்பட ஒரு சிறுவன் கைது


