News December 25, 2025
திட்டக்குடி: விபத்து நடந்த இடத்தில் போக்குவரத்து அமைச்சர் ஆய்வு

திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில், கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே நேற்று இரவு விபத்து நடந்ததில் 9 பேர் உயிரிழந்தனர். இந்த நிலையில் விபத்து நிகழ்ந்த இடத்தை தமிழ்நாடு போக்குவரத்துத்துறை மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சிவசங்கர் நேரில் சென்று பார்வையிட்டார். உடன் அதிகாரிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
Similar News
News December 27, 2025
கடலூர்: வீடு புகுந்து 20 சவரன் நகை கொள்ளை

குறிஞ்சிப்பாடி S.K.S.நகர் விரிவாக்கத்தில் வசிப்பவர் செல்வநாதன் (69). அவரது மனைவி லீலாவதி பின்பக்க கதவை திறந்து வைத்துவிட்டு முன் வாசலில் நேற்று கோலம் போட்டு முடித்துவிட்டு உள்ளே சென்ற போது பையுடன் முகமூடி அணிந்த ஒருவர் தப்பி ஓடியுள்ளார். பீரோவை திறந்து பார்த்தபோது அதிலிருந்து 20 சவரன் நகை மற்றும் ரூ.60,000 கொள்ளை போனது தெரியவந்தது. இதுகுறித்து குறிஞ்சிப்பாடி போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
News December 27, 2025
கடலூர்: வீடு கட்ட அரசு தரும் சூப்பர் ஆஃபர்

சொந்த வீடு கனவை நிறைவேற்ற மத்திய அரசு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதில் மானியத்துடன் கடன் வழங்கப்படும். சொந்த வீடு இல்லாத, ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருப்பவர்கள் <
News December 27, 2025
கடலூர்: பெண் குழந்தை உள்ளதா? உடனே விண்ணப்பிக்கவும்!

முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தின் கீழ், பெண் குழந்தைககள் கல்வி பயிலும் காலத்தில் நிதியுதவி வழங்கப்படுகிறது. குடும்பத்தில் 1 பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000-ம், 2 அல்லது 3 பெண் குழந்தைகள் இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இதற்கு இ-சேவை மையங்கள் மூலமாக விண்ணப்பிக்கலாம். தகுதி, தேவையான ஆவணங்ககள் உள்ளிட்ட விவரங்களை அறிய கடலூர் மாவட்ட சமூக நல அலுவலரை அணுகலாம். ஷேர் பண்ணுங்க


