News April 14, 2025

திடீர் மின் தடையா? இந்த நம்பருக்கு கால் பண்ணுங்க

image

மழை மற்றும் பலத்த காற்று வீசும் நேரங்களில் பொதுவாக மின்சாரம் துண்டிக்கப்படும். அதுவும் குறிப்பாக இரவு நேரங்களில் மின்தடை ஏற்பட்டால் பலருக்கு யாரிடம் புகார் செய்வது என்பது தெரியாத நிலை உள்ளது. இந்த பிரச்சனையை தீர்ப்பதற்காகவே ‘94987 94987’ என்ற பிரத்யேக சேவை எண்ணை TNEB அறிவித்துள்ளது. இதன்மூலம் பயனாளர்கள் தமிழ்நாட்டின் எந்த மூலையில் இருந்தாலும் மின் வாரியத்தை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம். SHARE!

Similar News

News August 5, 2025

திருவள்ளூர்: சனி தோஷம் நீங்க செல்ல வேண்டிய கோயில்

image

திருவள்ளுர் மாவட்டம் பூவிருந்தவல்லியில் உள்ளது திருக்கச்சி நம்பிகள் சமேத வரத ராஜ பெருமாள் கோயில். வைணவர்களில் முக்கியமான நபரான ராமானுஜரின் குருவான திருக்கச்சி நம்பிகளுக்கு பெருமாள் மீது இருந்த பக்தி காரணமாக ஏழரை வருடங்கள் பிடிக்க வேண்டிய சனி ஏழரை நாழிகையில் விலகிச் சென்றது. சனி தோஷத்தை பக்தியால் வென்றவர் என்பதால், இங்கு சென்று வழிபட்டால் சனி தோஷம் நீங்கும் என்பது நம்பிக்கை. ஷேர் பண்ணுங்க

News August 5, 2025

திருவள்ளூர் ரேஷன் அட்டைதாரர்களே…

image

திருவள்ளூரில், புதிய ரேஷன் அட்டை (ஸ்மார்ட் கார்டு) வாங்க இனி அலைச்சல் தேவையில்லை. புதிய ரேஷன் அட்டைக்கு (ஸ்மார்ட் கார்டுக்கு) விண்ணப்பிக்கவும், புதிய ரேஷன் அட்டை விண்ணப்பத்தின் நிலை குறித்து அறியவும் தமிழ்நாடு அரசு ஆன்லைன் சேவையை வழங்கி வருகிறது. <>இந்த லிங்கில் <<>>சென்று புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்கலாம். மேலும், பெயர் சேர்க்கை, நீக்கம், முகவரி மாற்றம் போன்றவற்றையும் செய்து கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க. <<17309510>>தொடர்ச்சி<<>>

News August 5, 2025

திருவள்ளூர் ரேஷன் அட்டைதாரர்களே…

image

புதிய ரேஷன் கார்டு கிடைக்கவில்லை என்றாலோ (அ) உங்கள் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டிருந்தாலோ நீங்கள் இந்த தளத்திலே புகார் அளிக்கலாம். முதலில் உங்கள் பெயரை குறிப்பிட வேண்டும். உங்கள் தொலைபேசி எண் & E-mail முகவரியை உள்ளிட வேண்டும். வகைப்பாடு என்னும் இடத்தில் மின்னணு அட்டை கிடைக்க பெறவில்லை (அ) மின்னணு அட்டை குடும்ப விவரங்கள் புதுப்பிக்கப்படவில்லை என்பதை தேர்வு செய்து புகாரை அனுப்பவும். ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!