News March 14, 2025

தா.பழூரில் அரசு தொழிற்பயிற்சி நிலையம் – பட்ஜெட்டில் அறிவிப்பு

image

அரியலூர் மாவட்டத்திற்கு புதிய அரசு தொழில் பயிற்சி நிலையம் தமிழக அரசு பட்ஜெட் தாக்களில் அறிவிப்பு தமிழக அரசின் இன்றைய பட்ஜெட் தாக்களில் 152 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 10 அரசு தொழில் பயிற்சி நிலையங்கள் அமைக்க பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது இதில் 1308 மாணவர்கள் பயன்பெறுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது இதில் அரியலூர் மாவட்டம் தா பழூரில் 1 அரசு தொழில் பயிற்சி நிலையம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

Similar News

News April 10, 2025

அரியலூர்: குழந்தை வரம் அருளும் திரௌபதி அம்மன்

image

அரியலூர் மாவட்டம், அகரம் என்னும் ஊரில் திரௌபதி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோயில் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக அறியப்படுகிறது. இங்கு சென்று மூலவர் திரௌபதி அம்மனை வழிபட்டால். நீண்ட நாள் பிள்ளைபேறு வேண்டுவோரின் வேண்டுதல் நிறைவேறி குழந்தை பாக்கியம் உண்டாகும் என்பது நம்பிக்கை. உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு SHARE செய்யுங்கள்.

News April 10, 2025

அரியலூர்: சமையல் உதவியாளர் பணியிடங்கள் அறிவிப்பு

image

அரியலூர் மாவட்டத்தில் பள்ளிகளில் செயல்படும் சத்துணவு மையங்களில் காலியாக உள்ள 178 சமையல் உதவியாளர் பணியிடங்கள் நேரடியாக நியமனம் செய்யப்படவுள்ளன. சமையல் உதவியாளர் பணியிடங்களின் எண்ணிக்கை அந்தந்த வட்டார அலுவலகங்களில் இனசுழற்சி வாரியாக தகவல் பலகையில் ஒட்டப்பட்டும். விண்ணப்பிக்க உரிய ஆவனங்களுடன் 29.04.2025-க்குள் விண்ணப்பிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி தெரிவித்துள்ளார்.

News April 10, 2025

பெண் எஸ்.எஸ்.ஐ-க்கு வாக்கி-டாக்கியில் பறந்த உத்தரவு

image

அரியலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் எஸ்.எஸ்.ஐ.யாக பணியாற்றிய சுமதி, கற்பழிப்பு தொடர்பாக புகார் அளிக்க வந்த பெண்ணிடம் தகாத வார்த்தைகளில் பேசி, புகாரை ஏற்க மறுத்துள்ளார். இந்த விவகாரம் டி.ஐ.ஜி. வருண்குமார் கவனத்திற்கு சென்றதால், அவர் வாக்கி-டாக்கி மூலம் இன்ஸ்பெக்டரிடம் விசாரணை நடத்தி, வாக்கி-டாக்கியிலேயே எஸ்.எஸ்.ஐ சுமதி-யை இடமாற்றம் செய்ய உத்தரவிட்டார்.

error: Content is protected !!