News December 14, 2025
தாராபுரம் அருகே சோகம்: பள்ளி மாணவர் உயிரிழப்பு!

குண்டடம் தாலுகா ருத்ராவதி பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீஹரி(15). இவர் அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் நேற்று முந்தினம் ஸ்ரீ ஹரி உடல்நிலை மோசமானது. இதனால் அவரது பெற்றோர் சிகிச்சைக்காக தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஸ்ரீ ஹரி உயிரிழந்தார். இது குறித்து குண்டடம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News March 6, 2026
திருப்பூர்: பட்டா மாற்றுவது இனி ரொம்ப சுலபம்!

சொந்தமாக வீடு அல்லது வீட்டு மனை வாங்குபவர்கள் அதற்கான பட்டாவில் பெயர் மாற்றம் செய்வது அவசியம். முன்பெல்லாம் பட்டா வாங்க வட்டாச்சியர் அலுவலகத்திற்கு நேரில் செல்ல வேண்டியது இருந்தது. ஆனால், தற்போது ஆன்லைனில் வந்துவிட்டது. இந்த <
News March 6, 2026
காங்கேயத்தில் மீண்டும் போட்டியா?

2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, சென்னை அண்ணா அறிவாலயத்தில் அமைச்சர் வெள்ளகோவில் சாமிநாதன் விருப்ப மனு தாக்கல் செய்தார். திருப்பூர் கிழக்கு மாவட்டம், காங்கேயம் தொகுதியில் போட்டியிட அவர் மனு அளித்தார். இந்நிகழ்வில் மண்டல பொறுப்பாளர் பத்மநாபன் மற்றும் திமுக நிர்வாகிகள், கட்சிப் பிரதிநிதிகள் திரளாகக் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
News March 6, 2026
உடுமலை அருகே கோர விபத்து: 3 பேர் பலி

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே தாந்தோணி பகுதியில் நேற்று மாலை தனியார் பேருந்தும், இருசக்கர வாகனமும் எதிர்பாராத விதமாக எதிரெதிரே மோதி விபத்து ஏற்பட்டது. இதில் இரு சக்கர வாகனத்தில் பயணித்த சிறுவன் உட்பட மூவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இவ்விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


