News March 25, 2024
தாராபுரம் அருகே சாலை விபத்தில் இரண்டு பேர் பலி

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே சின்னக்கம்பாளையம் பிரிவு என்ற இடத்தில் இன்று சாலை விபத்து ஏற்பட்டது. அங்கு இருந்த பயணிகள் மீது லாரி மோதியதில் சம்பவ இடத்திலேயே ஒருவர் பலியானார். மற்றொரு பெண் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்போது பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து தாராபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Similar News
News October 27, 2025
திருப்பூர்: உங்கள் வீட்டில் பெண் குழந்தை இருக்கா?

முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம் மூலம் ஒவ்வொரு பெண் குழந்தைக்கும் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. குடும்பத்தில் ஒரு பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000, 2 (அ) 3 பெண்குழந்தை இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம் அல்லது மாவட்ட சமூக நல அலுவலகத்தை அணுகி விண்ணப்பிக்கலாம். (தெரிந்தவர்களுக்கு SHARE பண்ணுங்க)
News October 27, 2025
திருப்பூரில் கிராம சபை கூட்டம்

உள்ளாட்சி தினமான வரும் நவ.1-ம் தேதி திருப்பூர் மாவட்டத்திலுள்ள 265 ஊராட்சிகளிலும் கிராமசபை நடைபெற உள்ளது. இக்கிராம சபையில் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் கலந்து கொண்டு ஊராட்சியின் வளர்ச்சி தொடர்பான ஆலோசனைகளை தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் மணிஷ் தெரிவித்துள்ளார்.
News October 27, 2025
திருப்பூர்: B.E/ B.Tech/ B.Sc போதும்! ரூ.1,40,000 வரை சம்பளம்

பாரத் எலெக்ட்ரானிக்ஸ் (BEL) நிறுவனத்தில் காலியாக உள்ள Probationary Engineer பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு B.E, B.Tech, B.Sc முடித்த 21 வயதுக்கு மேல் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.40,000 – 1,40,000 வரை சம்பளம் வழங்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் நவ.14ம் தேதிக்குள் https://bel-india.in/job-notifications/ என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கவும். (SHARE)


