News December 20, 2025
தாராபுரத்தில் வசமாக சிக்கிய நபர்: அதிரடி கைது!

திருப்பூர் மாவட்டம், தாராபுரம் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக மதுவிலக்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனை அடுத்து போலீசார், தாராபுரம் பொள்ளாச்சி ரோடு அருண் பேக்கரி அருகே சந்தேகத்திற்கு இடமாக நின்ற நபரை பிடித்து விசாரித்தனர். அவர் பல்லடம் பகுதியில் வசிக்கும் பீகாரை சேர்ந்த அஜய் சஹானி (37) என்பது தெரிந்தது. அவரை கைது செய்த போலீசார், அவரிடமிருந்த சுமார் 2 கிலோ கஞ்சா பறிமுதல் செய்தனர்.
Similar News
News December 20, 2025
திருப்பூர்: +2 போதும்.. நல்ல சம்பளத்தில் பள்ளியில் வேலை!

திருப்பூர் மக்களே, மத்திய இடைநிலை கல்வி வாரியம் என்னும் சி.பி.எஸ்.இ. கல்வி துறையில் காலியாக உள்ள 43 இளநிலை கணக்கர் மற்றும் உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதற்கு +2 முதல் படித்திருந்தால் போதுமானது. சம்பளம் ரூ.19,900 முதல் ரூ.63,200 வரை வழங்கப்படும். இப்பணிக்கு விருப்பமுள்ளவர்கள் வரும் டிச.22ம் தேதிக்குள் இந்த லிங்கை <
News December 20, 2025
திருப்பூர் வாக்காளர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

தமிழகத்தில் தற்போது வெளியிடப்பட்டுள்ள வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கானு தெரியலையா? கவலை வேண்டாம். முதலில் இந்த லிங்கை <
News December 20, 2025
திருப்பூர் யார் அதிகம் தெரியுமா?

தமிழகத்தில் எஸ்.ஐ.ஆர் பணிகள் முடிவடைந்ததை தொடர்ந்து, வரைவு வாக்காளர் பட்டியல் வெளிடப்பட்டுள்ளது. அதன்படி திருப்பூர் மாவட்டத்தில் மொத்தம் 18,81,144 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண் வாக்காளர்கள் 9,10,083 பெண் வாக்காளர்கள் 9,70,817 பேர், மூன்றாம் பாலினத்தவர்கள் 244 பேர் உள்ளனர். திருப்பூர் மாவட்டத்தில் மட்டும் சுமார் 5,63,785 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


