News February 13, 2025
தாரமங்கலம்: ரம்மியில் தொழிலாளி தற்கொலை

தாரமங்கலம், கருக்குபட்டி பவளத்தானூரை சேர்ந்த தமிழ்மணி (37) தறித்தொழில் செய்து வந்தார். ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தில் ஈடுபட்டு, பலரிடம் லட்சக்கணக்கில் பணம் வாங்கி விளையாடி இழந்துள்ளார். பணத்தைத் திருப்பி செலுத்தாமல் மன அழுத்தத்தில் இருந்த அவர், மதுவில் விஷம் கலந்து குடித்த நிலையில் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தாரமங்கலம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.
Similar News
News November 16, 2025
சேலம்: GPay / PhonePe / Paytm பயணிகள் கவனித்திற்கு!

சேலம் மக்களே, தற்போதைய டிஜிட்டல் யுகத்தில், செல்போன் எண் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பண பரிவர்த்தனைகள் மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளன. இத்தகைய சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், மீட்டு தரப்படும். SHARE பண்ணுங்க!
News November 16, 2025
சேலம்: கத்திமுனையில் தம்பதியிடம் அதிர்ச்சி சம்பவம்!

சேலம் மாசிநாயக்கன்பட்டியை சேர்ந்த தம்பதி சந்திரசேகரன் – பூங்கொடி. இவர்களது வீட்டுக்குள் மர்ம நபர்கள் புகுந்து, தம்பதியிடம் கத்தியை காட்டி ரூ.10 லட்சம் கேட்டு மிரட்டினர். பணம் இல்லை என்று தெரிவித்ததால், வீட்டில் இருந்த 15 பவுன் நகையை கொள்ளையடித்து தப்பி சென்றனர். இதுகுறித்த புகாரின் பேரில் அம்மாபேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து, சந்தேகத்தின் பேரில் 3 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News November 16, 2025
வாழப்பாடி: 100 ஆண்டு ரகசியத்தை உடைத்த மாணவன்!

சேலம் மாவட்டம் வாழப்பாடியில் கடலூர் சாலையில் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் வைக்கப்பட்ட 100 ஆண்டு பழமையான ‘மைல்கல்’ உள்ளது. இக்கல்லில் ‘செக்சன் லிமிட்’ என்று ஆங்கிலத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு கீழே சில குறியீடுகளும் காணப்படுகின்றன. இந்தக் கல்வெட்டை, வாழப்பாடியை சேர்ந்த 11-ஆம் வகுப்பு மாணவன் சிபிஅரசு ‘படி’ எடுத்து ஆய்வுக்கு அனுப்பியுள்ளார். இந்த மாணவருக்கு பாராட்டு குவிந்து வருகிறது.


