News January 30, 2026
தாரமங்கலம் அருகே விபத்து

தாரமங்கலம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் நேற்று ஒரு கார் அதிவேகமாகச் சென்று கொண்டிருந்தது. அப்போது, முன்னால் சென்ற லாரியின் பின்பகுதியில் எதிர்பாராத விதமாக கார் பலமாக மோதியது. இவ்விபத்தின் தாக்கத்தால் காரின் முன்பகுதி பலத்த சேதமடைந்தது. காரில் பயணித்தவர்கள் சிறு காயங்களுடன் நல்வாய்ப்பாக உயிர் தப்பினர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
Similar News
News January 31, 2026
தாரமங்கலம் அருகே நேர்ந்த சோகம்!

தாரமங்கலம் எம்ஜிஆர் நகரைச் சேர்ந்த மகாதேவன் (43), வீடு கட்டுவதற்காகப் பல்வேறு இடங்களில் கடன் வாங்கியதாகக் கூறப்படுகிறது. வாங்கிய கடனைத் திரும்பச் செலுத்த முடியாததால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தாரமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மன அழுத்தம் அல்லது தற்கொலை எண்ணம் ஏற்பட்டால், மாநில அரசின் ‘104’ உதவி எண் அல்லது ‘044-24640050’ தொடர்பு கொண்டு ஆலோசனை பெறலாம்.
News January 31, 2026
ஆத்தூர் அருகே பயங்கரம்: இளைஞர் பலி!

ஆத்தூர் அருகே ராமநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்த பத்திர எழுத்தர் தாமோதரன் (34). இவர் கடந்த 28-ஆம் தேதி கொத்தம்பாடியிலிருந்து ஆத்தூருக்கு டூவீலரில் சென்றார். அப்போது சாலையோரம் நின்றிருந்த காரின் கதவை திடீரென திறந்தபோது, டூவீலர் அதன் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் பலத்த காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த தாமோதரன், சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். ஆத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
News January 31, 2026
சேலம்: சினிமா பாணியில் அரங்கேறிய கொள்ளை!

அரியானா மாநிலம் பிணங்குவான் பகுதியில் உள்ள நகைக்கடையில் ரூ.10 கோடி மதிப்புள்ள நகைகளைக் கொள்ளையடித்த உத்திரபிரதேசத்தைச் சேர்ந்த ஆர்யாசிங் (எ) பரத் மற்றும் ராஜன்பாபு ஆகிய இரு பவாரியா கொள்ளையர்கள் சேலத்தில் பிடிபட்டனர்.பனமரத்துப்பட்டி பகுதியில் வீடு வாடகைக்கு எடுத்து, தச்சு வேலை செய்பவர்கள் போல பதுங்கியிருந்த இவர்களை, அரியானா மற்றும் சேலம் தனிப்படை போலீசார் அதிரடியாகச் சுற்றி வளைத்துக் கைது செய்தனர்


