News September 10, 2024
தாய் இறந்த துக்கத்தில் மகன் தற்கொலை

நெட்டப்பாக்கத்தை சேர்ந்த கேசவன் சீறுநீரக கல் நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். இதனால் அவர் அடிக்கடி மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை எடுத்து வந்தார். இதற்கிடையில் இவரது தாய் காசியம்மாள் கடந்த மாதம் 20ஆம் தேதி இறந்து விட்டார். இதனால் மனமுடைந்த கேசவன் நேற்று இரும்பு பைப்பில் நைலான் கயிற்றால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
Similar News
News September 15, 2025
புதுச்சேரி: டிகிரி போதும் ரயில்வேயில் வேலை!

புதுச்சேரி மக்களே, ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRB), Station Controller 368 பதவிகளை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி போதுமானது. சம்பளம் ரூ.35,400 வழங்கப்படும். எனவே, ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 14.10.2025 தேதிக்குள் <
News September 15, 2025
மத்திய அமைச்சரை வரவேற்ற புதுவை அமைச்சர்

புதுச்சேரியில் பாஜகவின் முக்கிய நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் தனியார் விடுதியில் நடைபெற்று வருகிறது. இதில் மத்திய அமைச்சர்கள் மன்சுக் மாண்டியா, அர்ஜுன் ராம் மேக்வால், அமைப்பு செயலாளர் சப்தோஷ் ஆகியோர் பங்கேற்றனர். முன்னதாக கூட்டத்தில் பங்கேற்க வந்த மத்திய அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வாலை, அமைச்சர் நமச்சிவாயம் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.
News September 15, 2025
புதுச்சேரி: காருக்குள் ஆண் சடலம்-போலீசார் விசாரணை

புதுச்சேரி அண்ணா நகர் முதல் தெருவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரில் ஆண் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. உடனடியாக அப்பகுதிக்கு வந்த உருளையன்பேட்டை போலீசார் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கொலை செய்து காருக்குள் சடலத்தை வைத்தனரா? அல்லது மது போதையில் காருக்குள் சென்று இறந்து கிடந்தாரா? என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.