News March 26, 2025
தாய்ப்பால் குடித்த பெண் குழந்தை மூச்சுத்திணறி பலி

திருத்தணி, சாய்பாபா நகரைச் சேர்ந்தவர் சுவாதி – பிரித்திவிராஜ் தம்பதியினர். இவர்களுக்கு 2 மாதமான பெண் குழந்தை உள்ளது. குழந்தைக்கு நேற்று (மார்.25) தாய்ப்பால் கொடுத்தபோது மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. உடனடியாக குழந்தையை மருத்துவமனைக்கு கொண்டு சென்று பார்த்தபோது, குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர் தெரிவித்தார். இதனால் குழந்தையின் பெற்றோர் கதறி துடித்தது பார்ப்போரை கண்கலங்க வைத்தது.
Similar News
News August 25, 2025
திருவள்ளூர் சந்தையில் விலை நிலவரம்

திருவள்ளூர் இன்று காய்கறி, பழ விலை: வெங்காயம் ரூ.33–37, தக்காளி ரூ.61–67, பச்சைமிளகாய் ரூ.54–60, உருளைக்கிழங்கு ரூ.33–37, கேரட் ரூ.45–50, முட்டைகோஸ் ரூ.30–33, காலிஃபிளவர் ரூ.31–34, கத்திரிக்காய் ரூ.39–43, முருங்கைக்காய் ரூ.69–76. பழங்களில் ஆப்பிள் வாஷிங்டன் ரூ.276–305, சிம்லா ரூ.155–171, வாழை ரூ.69–76, மாம்பழம் ரூ.49–55, ஆரஞ்சு ரூ.63–70, திராட்சை ரூ.121–133, மாதுளை ரூ.132–146, பப்பாளி ரூ.36–39.
News August 25, 2025
திருவள்ளூர்: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

2025-ஆம் ஆண்டிற்கான முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகள் வருகின்ற 26.08.2025 முதல் 12.09.2025 திருவள்ளூர் மாவட்டத்தில் நடைபெற உள்ளன. மேலும் நீச்சல் போட்டியானது 27.08.2025 அன்று நடைபெறவிருந்த போட்டியானது வருகின்ற 04.09.2025 அன்று காலை 6.00 மணிக்கு திருவள்ளூர் மாவட்ட விளையாட்டரங்கத்தில் உள்ள நீச்சல் குள வளாகத்தில் நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
News August 25, 2025
திருவள்ளூர் மக்களே இந்த நம்பர் உங்க கிட்ட இருக்கா?

அரசு மருத்துவ மனைகளை நம்பி தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் சிகிச்சைக்கு வந்து செல்லும் நிலையில், சில நேரங்களில் அங்கு சிகிச்சை சரி இல்லை என்ற புகாரும் வருகிறது. அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை சரி இல்லை என்றாலோ, பணியாளர்கள் சரியாக நடந்துகொள்ளவில்லை என்றாலோ பொதுமக்கள் TOLL FREE 104 எண்ணில் புகார் செய்யலாம். தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க. <<17511472>>தொடர்ச்சி<<>>