News January 28, 2025
தாய்க்கு கோயில் கட்டிய மகன்கள்

சக்கரக்கோட்டையை சேர்ந்தவர்கள் முத்து, மனைவி ராஜாத்தி(55). 2024 ஜன.26ல் ராஜாத்தி உடல்நலக்குறைவால் இறந்து விட்டார். தாயின் நினைவாக அவரது குடும்பத்தினர் ரூ.6 லட்சத்தில் வீட்டருகே கோயில் கட்டி 6 அடி உயரத்தில் ராஜாத்தியின் பைபர் சிலை அமைத்துள்ளனர். முதலாம் ஆண்டு நினைவு நாளில் (ஜன.,26) திறப்பு விழா நடந்தது. அமைச்சர்கள் ராஜேந்திரன், கீதாஜீவன், அரசு அதிகாரிகள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
Similar News
News August 13, 2025
ராம்நாடு: நிலம் வாங்குறீங்களா? இதை கவனிங்க…

சொந்தமாக நிலம் வாங்கி வீடு கட்ட வேண்டும் என்பது இன்று பலரின் கனவாக உள்ளது. அவ்வாறு வாங்கும் நிலத்தின் மீது ஏதாவது நீதிமன்ற வழக்கு உள்ளதா என்பதை தெரிந்து கொள்வது பலருக்கும் சவாலாக உள்ளது. ராமநாதபுரம் மக்களுக்கு இனி அந்த கவலை இல்லை. நிலத்தின் மீது உள்ள நீதிமன்ற வழக்கு பற்றி அறிய <
News August 13, 2025
கமுதி: லஞ்சம் பெற்ற VAO மற்றும் இடைத்தரகர் கைது

கமுதியில் நபர் ஒருவர் வாரிசு சான்றிதழ் பெற ஆன்லைனில் விண்ணப்பித்துள்ளார். இதற்கு விஏஒ பிரேமானந்த் தனக்கு நான்காயிரம் பணம் வேண்டும் என தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் அந்த நபர் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் தெரிவித்துள்ளார். புகாரின் பேரில், லஞ்ச ஒழிப்புத்துறை கொடுத்து அனுப்பிய ரசாயனம் தடவிய ரூபாயை விஏஒவிடம் கொடுக்கும் பொழுது, கையும் களவுமாக பிடிபட்டார். இடைத்தரகரும் கைது செய்யப்பட்டார்.
News August 13, 2025
ராம்நாடு: ஏமாறாமல் வெளிநாடு செல்ல வாய்ப்பு!

ராமநாதபுரம் மாவட்ட இளைஞர்கள் வெளிநாடு வேலைவாய்ப்புகளைப் பெற மாவட்ட நிர்வாகம் அங்கீகரிக்கப்பட்ட ஏஜென்ட்களின் விவரங்களை வெளியிட்டுள்ளன. போலி ஏஜெண்டுகளால் யாரும் ஏமாறாமல் இருக்க, அரசால் அங்கீகரிக்கப்பட்ட இந்த ஏஜென்ட்களைத் தொடர்பு கொண்டு, பாதுகாப்பாக நல்ல வேலைவாய்ப்புகளை பெறலாம். ஏஜென்ட்கள் விவரம் பெற <