News April 29, 2025
தாயை கொன்ற வழக்கில் இருந்து மகன் விடுதலை

குன்றத்தூர் அருகே சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து எரித்து கொன்ற தஸ்வந்த் ஜாமினில் வெளி வந்து தாயை கொன்ற சம்பவம் 2017ம் ஆண்டு பரபரப்பை ஏற்படுத்தியது. சிறுமி தொடர்பான வழக்கில் செங்கல்பட்டு மகிளா நீதிமன்றம் விதித்த மரண தண்டனைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ள நிலையில், இன்று தாயை கொன்ற வழக்கிலும் போதிய ஆதாரங்கள் இல்லை என கூறி செங்கல்பட்டு நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.
Similar News
News August 16, 2025
செங்கல்பட்டு: கிருத்திகைக்கு போக வேண்டிய முருகன் கோயில்கள்!

ஆடிக் கிருத்திகை முருகனுக்கு உகந்த நாளாகக் கருதப்படுகிறது. செங்கல்பட்டு மாவட்டம் பல புராதன முருகன் கோயில்களைக் கொண்டுள்ளது. அதில்,
▶️திருப்போரூர் கந்தசாமி கோயில்,
▶️செம்மலை முருகன் கோயில்,
▶️ஆனூர் கந்தசுவாமி கோயில்
▶️சாளுவன்குப்பம் முருகன் கோயில்
▶️செய்யூர் முருகன் கோயில் குறிப்பிடத்தக்கவை. செல்வ செழிப்பு & மகிழ்ச்சி பொங்க ஆடிக் கிருத்திகையில் இங்கு சென்று முருகனை வழிபடுங்க. ஷேர்!
News August 16, 2025
செங்கல்பட்டு: கோயில் விழாவில் மின்சாரம் தாக்கி இளைஞர் பலி!

செங்கல்பட்டு, அச்சிறுபாக்கம் அருகே ஆத்தூர் சமத்துவபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் விஜயகாந்த். இவர் நேற்று (ஆகஸ்ட் 15) மதியம் வெளியம்பாக்கம் கிராமத்தில் உள்ள முருகர் கோயில் திருவிழாவிற்கு, ஒலிபெருக்கி அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து அச்சிறுப்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
News August 16, 2025
ரயில்கள் தாம்பரத்திற்கு மாற்றம்

எழும்பூர் ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருவதால், கடந்த ஜூன் 20 முதல் ஆகஸ்ட் 18 வரை சில ரயில்கள் தாம்பரத்தில் இருந்து புறப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்திருந்தது. இந்நிலையில் கொல்லம் மெயில் மற்றும் குருவாயூர் விரைவு ஆகிய ரயில்கள் மறு அறிவிப்பு வரும் வரை தற்போது தாம்பரத்தில் இருந்து புறப்படும் நடைமுறையே தொடரும் என தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது.