News January 12, 2026
தாயை இரும்பு கம்பியால் தாக்கிய மகன்

குளித்தலை, வலையபட்டியை சேர்ந்தவர் அரசவல்லி 45. இவரின் 3வது மகன் லட்சுமணன் 23 என்பவர் நேற்று தனது தாய் அரசவள்ளியிடம் சொத்தை பிரித்து கேட்டு தனது கல்வி சான்றிதழ், ரேஷன் கார்டை கேட்டு இரும்பு கம்பியால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். காயம் அடைந்த அரசவல்லி குளித்தலை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் பெற்று புகார் அளித்துள்ளார். இது குறித்து குளித்தலை போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
Similar News
News February 19, 2026
கரூர்: UPI பயன்படுத்துவோர் கவனத்திற்கு!

தற்போது அனைவரும் UPI மூலமே பணத்தை அனுப்புகின்றனர். இந்த சூழலில், தவறுதலாக மாற்றி தெரியாத நபர்களுக்கு பணத்தை அனுப்பி விட்டால் கவலை வேண்டாம். உடனடியாகப் பணம் பெற்றவரைத் தொடர்பு கொள்ளவும். இல்லையெனில், Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) வாடிக்கையாளர் சேவை எண்களைத் தொடர்புகொண்டு புகார் தெரிவித்தால் உங்கள் பணத்தைத் திரும்பப் பெறலாம். SHARE பண்ணுங்க!
News February 19, 2026
கரூர் கலெக்டர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

கரூர் மாவட்ட பள்ளிகளில் 24 சமையல் உதவியாளர் பணியிடங்கள் நேரடி நியமனம் செய்யப்படவுள்ளன. 10-ம் வகுப்பு தகுதி, 21-40 வயதுடைய பெண்கள் https://karur.nic.in/ தளத்தில் விண்ணப்பிக்கலாம். பூர்த்தி செய்த படிவங்களை வரும் 27-ஆம் தேதி மாலை 5:45-க்குள் ஒன்றிய/மாநகராட்சி அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். ஓராண்டு பணிக்குப்பின் சிறப்பு காலமுறை ஊதியம் வழங்கப்படும் என கலெக்டர் தங்கவேல் அறிவிப்பு.ஷேர் பண்ணுங்க
News February 19, 2026
கரூர் அருகே கோர விபத்து!

கரூர் மாவட்டம், மொச்ச கொட்டாம்பாளையம் சாலையில், ஞானசேகரன் என்பவர் நேற்று தனது இரு சக்கர வாகனத்தில், சென்று கொண்டிருக்கும் பொழுது, அதே வழியில் சுதாகர் ஒட்டி வந்த கார் மோதியதில், ஞானசேகரன் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து கரூர் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


