News January 12, 2025

தாயை அடித்து கீழே தள்ளி கொலை; மகன் மீது வழக்கு

image

இரணியல் அருகே இலந்தன் விளையைச் சேர்ந்தவர் தங்கம்மாள். இவரது மகன் பிரபு தாஸ். இவர் திருமணம் ஆகி மனைவியை பிரிந்து வாழ்ந்து வருகிறார். குடிப்பழக்கம் இருந்து வந்த நிலையில் அடிக்கடி தாயிடம் சண்டை போடுவது வழக்கம். இந்நிலையில், தாயை வீட்டை விட்டு வெளியே போகச் சொல்லி அவர் மறுக்கவே, அவரை தாக்கி கீழே தள்ளியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயம் அடைந்த அவர் இறந்துவிட்டார். இரணியல் போலீசார் வழக்குப்பதிந்துள்ளனர்.

Similar News

News November 14, 2025

1500 கிலோ ரேஷன் அரிசி கடத்தல்: அதிகாரிகள் நடவடிக்கை

image

குமரி மாவட்டம் வழியாக கேரளாவுக்கு அரிசி கடத்திச் செல்லப்படுவதை தடுக்க பறக்கும் படையினர் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். இந்த நிலையில் விளவங்கோடு வட்ட வழங்கல் அதிகாரிகள் இன்று மேற்கொண்ட சோதனையில் காஞ்சிரக்கோடு எந்த இடத்தில் காரில் கடத்திச் செல்லப்பட்ட 1500 கிலோ ரேஷன் அரிசியை கண்டுபிடித்தது பறிமுதல் செய்தனர். இது தொடர்பான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

News November 14, 2025

நாகர்கோவிலில் இருந்து பம்பைக்கு சிறப்பு பேருந்து

image

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் நாகர்கோவில் மண்டலம் சார்பில் நாகர்கோவிலில் இருந்து பம்பைக்கு இம்மாதம் பதினாறாம் தேதி முதல் ஜனவரி மாதம் இருபதாம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட இருப்பதாக அரசு போக்குவரத்து கழகம் இன்று தெரிவித்துள்ளது. நாகர்கோவிலில் இருந்து காலை 6 மாலை 6:30 இரவு 7 மற்றும் 7:30 மணிகளில் இந்தப் பேருந்து இயக்கப்பட உள்ளது. (இதன் பயண கட்டணம் ரூ.364) SHARE

News November 14, 2025

குமரியில் 3 பேருக்கு 5 ஆண்டுகள் சிறை

image

தேங்காபட்டணம் பகுதியை சேர்ந்த சிறுமிக்கு 2020-ம் ஆண்டு பாலியல் தொல்லை அளித்த இஸ்மாயில்(34), ஜாகீர் உசேன்(53), அப்துல் ஜபர்(67), முள்ளூர்துறை சகாயதாசன்(52),சுந்தரய்யா மீது குளச்சல் மகளிர் போலீசார் வழக்கு பதிந்தனர். நாகர்கோவில் போக்சோ சிறப்பு கோர்ட்டில் நடந்த விசாரணையில் நேற்று நீதிபதி சுந்தரய்யா, இஸ்மாயில் உயிரிழந்த நிலையில் ஏனைய 3 பேருக்கும் தலா 5 ஆண்டு சிறை, ரூ.3000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!