News December 28, 2025

தாயின் சடலத்துடன் 20 நாள்கள் வாழ்ந்த இளைஞர்!

image

சத்தீஸ்கர் மாநிலம் ஜாஷ்பூரில், தாயாருடன் வசித்து வந்தவர் பிரவீன் கால்கோ. பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டிருந்த தாய்க்கு, வீட்டிலேயே சிகிச்சை பார்த்து வர, திடீரென உயிரிழந்துள்ளார். தாயின் பிரிவை தாங்க முடியாமல், அதிர்ச்சியில் கடும் மன அழுத்தத்திற்கு சென்ற அவர், 20 நாள்களாக தாயின் சடலத்துடன் ஒரே அறையில் வசித்துள்ளார். உடல் அழுகி, துர்நாற்றம் வீசிய பிறகே இந்த துயர சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

Similar News

News December 30, 2025

2025-ல் ஹிட் அடித்த சிறு பட்ஜெட் படங்கள்

image

தமிழ் சினிமாவில் இந்தாண்டு ஏராளமான சிறு பட்ஜெட் படங்கள் பெரும் ஹிட் அடித்தன. அதில், சில படங்கள் சற்றும் எதிர்பார்க்காத வகையில் வசூலையும் வாரி குவித்தன. அவை எந்தெந்த படங்கள் என்று, மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. இதில் இல்லாமல், உங்களுக்கு தெரிந்த படங்கள் வேறு ஏதேனும் இருந்தால் கமெண்ட்ல சொல்லுங்க. SHARE.

News December 30, 2025

வாழ்க்கையை மேம்படுத்தும் பழக்கங்கள்

image

வாழ்க்கையை மேம்படுத்துவது ஒரே நாளில் நடந்துவிடாது. தினசரி ஏற்படும் சிறிய, நிலையான மாற்றங்களின் பலனாக வாழ்க்கை மேம்படுகிறது. தொடர்ச்சியாக நாம் கடைபிடிக்கும் பழக்கம், வழக்கமாக மாறும்போது வாழ்க்கையின் அற்புதம் நிகழும். அவை என்னென்ன பழக்கங்கள் என்று, மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. இதை SHARE பண்ணுங்க.

News December 30, 2025

தவெகவுடன் காங்கிரஸ் கூட்டணி அமைக்குமா?

image

தவெக கூட்டணியில் காங்., இடம்பெறுமா என்ற கேள்வி அண்மையில் எழுந்துள்ளது. இந்நிலையில், திமுகவுடனான 22 ஆண்டு கால கூட்டணியை முறிக்க காங்., தயங்குவதாகக் கூறப்படுகிறது. இதனிடையே, காங்.,-க்கு 50 தொகுதிகளை ஒதுக்க தவெக தயார் என தகவல் வெளியாகியுள்ளது. திமுக கூட்டணியில் 41 சீட்கள் பெற வேண்டும் என காங்., உறுதியாக உள்ளது. இதற்கு திமுக உடன்படாவிட்டால் மாற்றம் நிகழலாம் என அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

error: Content is protected !!