News September 15, 2025
தாம்பரம் GH-ல் குவிந்த மக்கள்

தாம்பரம், அரசு மருத்துவமனையில் இன்று வழக்கத்திற்கு மாறாக மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. இதனால், சிகிச்சைக்கு வரும் நோயாளிகள் கடும் அவதி அடைந்தனர். மேலும், அங்கு மாத்திரைகள் வாங்க போதுமான கவுண்ட்டர்கள் இல்லாததால், மிகவும் சிரமம் அடைந்தனர். எனவே, இங்கு கூடுதல் கவுண்ட்டர்களை திறக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Similar News
News September 15, 2025
அண்ணா சிலைக்கு மாலை அணிவித்த மேயர்

அண்ணாவின் 117-வது பிறந்தநாள் விழா இன்று (செப்.15) கொண்டாடப்படுகிறது. அதன்படி, தாம்பரம் மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள அண்ணா, சிலைக்கு மாநகராட்சி மேயர் வசந்தகுமாரி மலர் மாலை அணிவித்து மரியாதை செய்தார். மேலும் அன்னதான நிகழ்ச்சியும் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் துணை மேயர் காமராஜர், மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
News September 15, 2025
செங்கல்பட்டு: இலவசமாக காசிக்கு போக சூப்பர் வாய்ப்பு

தமிழக இந்து சமய அறநிலையத்துறை 600 பக்தர்களை ராமேஸ்வரம் – காசிக்கு ரயில் மூலமாக இலவசமாக ஆன்மிகப் பயணம் அழைத்துச் செல்ல உள்ளது. 60 முதல் 70 வயதுடைய, ஆண்டுக்கு ரூ. 2 லட்சத்திற்குள் வருமானம் உள்ள பக்தர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பப் படிவங்களை செங்கல்பட்டு மண்டல இணை ஆணையர் அலுவலகத்திலோ அல்லது இந்த<
News September 15, 2025
செங்கல்பட்டு: எல்லாமே ஒரே இடத்தில்! மிஸ் பண்ணிடாதீங்க

செங்கல்பட்டு மக்களே, தமிழ்நாடு அரசின் சேவைகளை பெற நீங்க அலைய வேண்டாம். வாரிசு சான்றிதழ், வருமான சான்றிதழ், இருப்பிட சான்று, சாதி சான்றிதழ், பிறப்பு சான்று/இறப்பு சான்று, சொத்து வரி பெயர் மாற்றம், குடிநீர் இணைப்பு, பட்டா மாறுதல் & இணையவழி பட்டா போன்ற சேவைகளை நீங்கள் ஒரே இடத்தில் பெறலாம். இங்கு <