News January 10, 2026

தாம்பரம்: 3 பேர் அதிரடி கைது!

image

வண்டலூர் – மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் தாம்பரம் மதுவிலக்கு போலீசார் நடத்திய சோதனையில், கஞ்சா மற்றும் ஹெராயின் கடத்திய மேற்கு வங்கத்தைச் சேர்ந்த சரோஜ் குமார் (51), சகஜான் (31), ரகுமான் (38) ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 25 கிலோ கஞ்சா மற்றும் 5 கிராம் ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டது. வெளிமாநிலங்களில் இருந்து போதைப்பொருட்களைக் கொண்டு வந்து விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது.

Similar News

News February 8, 2026

செங்கல்பட்டு: இனி லைன்மேனை தேடி அலைய வேண்டாம்

image

செங்கல்பட்டு மக்களே, வீடுகள், வணிக வளாகங்கள்(ம) அலுவலகங்களில் மின்சார சேவை பாதிக்கப்படும் போது, பொதுமக்கள் லைன்மேனைத் தேடி அலைய வேண்டிய காலம் முடிந்தது. தற்போது,பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987-94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், அடுத்த 5 நிமிடங்களில் தங்களிடம் லைன்மேன் வந்து சேவையை சரிசெய்வார். SHARE பண்ணுங்க!

News February 8, 2026

செங்கல்பட்டு: அடுத்தடுத்து வாகனங்கள் மோதி விபத்து!

image

சோழிங்கநல்லூரில் ஓ.எம்.ஆரில், ஐ.டி. ஊழியர்களை ஏற்றிச் சென்ற டெம்போ டிராவலர் உட்பட மூன்று வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்து ஏற்பட்டது. முன் சென்ற லாரி திடீரென பிரேக் பிடித்ததால், பின்னால் வந்த கார், டெம்போ டிராவலர் மற்றும் மற்றொரு லாரி மோதின. இதில் மூன்று வாகனங்களும் சேதமடைந்தன. ஓட்டுநர்கள் மற்றும் ஐ.டி. ஊழியர்கள் காயமின்றி தப்பினர். போலீசார் விசாரணை நடத்துகின்றனர்.

News February 8, 2026

செங்கல்பட்டு: கடையில் பற்றி எரிந்த தீ!

image

பழைய மாமல்லபுரம் சாலை திருப்போரூர் முருகன் கோவில் அருகே செந்தில் என்பவருக்கு சொந்தமான இடத்தில் ஒரு பழக்கடை மற்றும் மற்றொரு பகுதியில் ஒரு சிப்ஸ் கடை நடத்த தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்ததாக தெரிகிறது. இந்நிலையில், திடீரென பயங்கரமாக தீ பிடித்து எரிந்தது. தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீயை போராடி அணைத்தனர். இருப்பினும் ரூ.5 லட்சம் மதிப்பு உள்ள பொருட்கள் நாசமாகின.

error: Content is protected !!