News January 9, 2025
தாம்பரம் வட்டார போக்குவரத்து அலுவலர் பணியிடை மாற்றம்

தாம்பரம் வட்டார போக்குவரத்து அலுவலராக சோழிங்கநல்லூர் வட்டார போக்குவரத்து அலுவலர் யுவராஜ் என்பவர் கூடுதலாக கவனித்து வந்தார். இந்நிலையில் ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து ஆணையராக உதவி செயலராக பணியிடை மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இவருக்கு பதிலாக தாம்பரம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ஆர்டிஓ உதவியாளராக இருந்த குமரகுரு கூடுதல் பொறுப்பாக ஆர்டிஓ பணிகளை கவனிப்பார் என உத்தரவிடப்பட்டுள்ளது.
Similar News
News December 13, 2025
செங்கல்பட்டு: உங்க வீட்டில் ஆண் குழந்தை இருக்கா?

செங்கல்பட்டு மக்களே.., ’பொன்மகன் சேமிப்பு திட்டம்’ ஆண் குழந்தைகளின் நலனுக்காக அஞ்சல் துறையால் செயல்படுத்தப்படுகிறது. 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் பெற்றோர் & பாதுகாவலர் மூலமாகவும், 10 வயதிற்கு மேற்பட்டவர்கள் தாங்களாகவே கணக்கை துவக்க முடியும். (எ.கா) மாதம் 1000 என ஆண்டுக்கு ரூ.12,000 முதலீடு செய்தால் 15 ஆண்டு முடிவில் ரூ.1,80,000 (ம) ரூ.1,35,572 வட்டியுடன் மொத்தமாக ரூ.3,14,572 கிடைக்கும். SHARE IT
News December 13, 2025
செங்கல்பட்டு: கண்டோன்மெண்ட் ஊழியரை தாக்கிய 3 பேர்

பல்லாவரம்-பரங்கிமலை கண்டோன்மென்ட் பகுதி, திரிசூலத்தில், ஜெயகுமாரி என்பவர் அனுமதியின்றி குடிநீர் இணைப்பு எடுத்திருந்தார். நிர்வாகத்தின் நோட்டீஸுக்கு பிறகும் இணைப்பு துண்டிக்கப்படாததால், ஊழியர்கள் அதைத் துண்டிக்கச் சென்றனர். அப்போது, ஜெயகுமாரியின் மகன்களான ஜெயபால், பார்த்திபன் & ஜெயக்குமார் ஆகியோர் கண்டோன்மென்ட் ஊழியர்களை கற்கள் மற்றும் கட்டைகளால் தாக்கியுள்ளனர். இதனால் 3மகன்களையும் கைது செய்தனர்.
News December 13, 2025
செங்கல்பட்டு: நடந்து சென்ற வாலிபருக்கு நேர்ந்த கொடூரம்!

மேற்கு தாம்பரத்தைச் சேர்ந்த ரங்கநாதபுரத்தைச் சேர்ந்தவர் முகமது ரிஸ்வான் (23 வயது). இவர் சண்முகம் சாலையில் உள்ள ஒரு கைபேசி கடையில் வேலை செய்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு, முகமது ரிஸ்வான் காந்தி சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தபோது, அடையாளம் தெரியாத ஒருவர் அவரைத் கட்டையால் தலையில் தாக்கி, அவரிடமிருந்த கைபேசி மற்றும் 400 ரூபாயைப் பறித்துக்கொண்டு தப்பி ஓடிவிட்டார்.


