News April 28, 2025
தாம்பரம் – திருச்சி இடையே சிறப்பு ரயில்

கோடை விடுமுறையையொட்டி சென்னை தாம்பரம் – திருச்சி இடையே நாளை (ஏப்ரல் 29) முதல் ஜூன் 29ஆம் தேதி வரை இருமார்க்கத்திலும் வாரத்தில் 5 நாட்கள் சிறப்பு ரயில் இயக்கப்படும் எனத் தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. திருச்சியில் இருந்து அதிகாலை 5.35 மணிக்கு புறப்படும் இந்த ரயில், மதியம் 12.30 மணிக்கு தாம்பரம் வரும். தாம்பரத்தில் இருந்து மதியம் 3.45 மணிக்கு புறப்பட்டு, இரவு 10.40 மணிக்கு திருச்சி சென்றடையும்.
Similar News
News November 4, 2025
SIR: சென்னை வாக்காளர் கவனத்திற்கு

சென்னை வாக்காளர்களுக்கு ஓர் முக்கிய அறிவிப்பு வந்துள்ளது. சென்னையில் இன்று 4-11-2025 முதல் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த பணிகளை தேர்தல் அலுவலர்கள் தொகுதி வாரியாக ஆய்வு மேற்கொள்ள உள்ளனர். வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணிகள் குறித்த சந்தேகங்களுக்கு விளக்கம் பெற 044-25619547 மற்றும் 1950 ஆகிய எண்களில் வாக்காளர்கள் தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. உடனே ஷேர் பண்ணுங்க.
News November 4, 2025
சென்னை அரசு நிறுவன எண்களை தெரிஞ்சிக்கோங்க

சென்னை தலைமை அஞ்சலகம்-044-28542947, பொது அஞ்சலகம் – 044-28542947, அரசு பொது மருத்துவமனை-044-25305000, மல்டி ஷ்பெஷாசிலிட்டி ஹாஸ்பிட்டல்-044-25666000, ஸ்டான்லி ஹாஸ்பிட்டல்- 044-25281347, ராயப்பேட்டை மருத்துவமனை- 044-28483051, IOB-28524171, இந்தியன் வங்கி-25233231, கனரா வங்கி-24346038, மின்வாரிய தலைமை பொறியாளர்-044-28520131. *நண்பர்களுக்கு பகிரவும்*
News November 4, 2025
சென்னை: தறிகெட்டு ஓடிய கார்; தொம்சம் செய்த மக்கள்

சென்னை ஈசிஆர் சாலையில் நேற்று புல்லட் மீது அதிவேகமாக சென்ற பென்ஸ் கார் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் சம்பவ இடத்தில் ஒருவர் உயிரிழந்தார். காரில் சென்ற 2 இளைஞர்களும் மது போதையில் இருந்துள்ளனர். அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் இளைஞர்களை பிடித்து தர்மஅடி கொடுத்து காரை அடித்து நெருக்கினர். தகவலறிந்த போலீசார் இளைஞர்களை கைது செய்து விசாரித்து வருகின்றனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


