News February 27, 2026

தாம்பரம் கடற்கரை இடையே 20 விரைவு மின்சார ரயில் இயக்கம்

image

எழும்பூரில் நடைபெற்ற வரும் பராமரிப்பு பணிகள் காரணமாக மின்சார ரயில் சேவை குறைக்கப்பட்டுள்ளது. இதனால் பயணிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர். இந்நிலையில் பயணிகளின் சிரமத்தை குறைக்க தாம்பரம் – கடற்கரை இடையே இன்று முதல் கூடுதலாக 20 விரைவு மின்சார ரயில்கள் இயக்கப்படும் என்று அறிவித்துள்ளது. இந்த ரயில் கிண்டி, மாம்பலம் (ம) எழும்பூர் ரயில் நிலையத்தில் மட்டுமே நிற்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News February 28, 2026

செங்கல்பட்டு: தமிழகத்தின் மிகப்பெரிய போர்க்களம்!

image

சமீபத்தில் வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலின்படி, செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள சோழிங்கநல்லூர் சட்டமன்றத் தொகுதி தமிழகத்திலேயே அதிக வாக்காளர்களைக் கொண்ட தொகுதியாக மீண்டும் உருவெடுத்துள்ளது. இங்கு சுமார் 5.36 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். இந்த தொகுதியை கைப்பற்றுவது அரசியல் கட்சிகளுக்கு ஒரு கௌரவப் பிரச்சினையாக மாறியுள்ளது. தற்போது திமுகவின் எஸ். அரவிந்த் ரமேஷ் MLAவாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

News February 28, 2026

பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் ஏலம்

image

தாம்பரம் காவல் ஆணையரக எல்லைக்குட்பட்ட பள்ளிக்கரணை மற்றும் சேலையூர் காவல் நிலையங்களில் நீண்ட நாட்களாக உரிமை கோரப்படாமல் உள்ள 349 வாகனங்களை பகிரங்க ஏலம் விட முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி பள்ளிக்கரணையில் மார்ச் 4ம் தேதி, சேலையூரில் மார்ச் 6ம் தேதி காலை 10 மணிக்கு ஏலம் நடைபெறும். பள்ளிக்கரணையில் மார்ச் 2ம் தேதி, சேலையூரில் மார்ச் 4ம் தேதி காலை 10 மணிக்கு ரூ.500 செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம்.

News February 28, 2026

செங்கல்பட்டில் துடிதுடித்து பலி

image

திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த சதீஷ்குமார் (28) என்பவர், படாளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மெய்யூர் கிராமத்தில் உள்ள சந்த்ராஜ் பெருமாள் கோவிலில் கட்டட வேலையில் ஈடுபட்டு வந்தார். வேலை செய்துகொண்டிருந்த போது சாரத்தில் இருந்து திடீரென தவறி கீழே விழுந்ததில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டு துடிதுடித்து உயிரிழந்தார். சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!