News July 28, 2024

தாம்பரம் அருகே கடும் போக்குவரத்து நெரிசல்

image

தாம்பரம் ஜி.எஸ்.டி. சாலையில் 2ஆவது நாளாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. பராமரிப்பு பணிக்காக, சென்னை கடற்கரை – செங்கல்பட்டு இடையே 55 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. இதனால், தாம்பரம் பேருந்து நிலையத்தில் மக்கள் கூட்டம் அலை மோதி வருகிறது. இதனால், மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் கூடுதல் பேருந்து இயக்கப்பட்டாலும், போக்குவரத்து நெரிசல் தொடர்ந்து ஏற்பட்டு வருகிறது.

Similar News

News August 10, 2025

செங்கல்பட்டில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழும் அதிசயம்!

image

செங்கல்பட்டு அமைந்துள்ள திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோயிலில் இந்திரன் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை இடி பூஜை செய்வதாக நம்பப்படுகிறது. ஒரு காலத்தில் இங்கு தினமும் இரண்டு கழுகுகள் (பட்சி) வந்து உணவு உண்பதாக ஒரு நம்பிக்கை இருந்தது. இதனால் இத்தலம் “பட்சி தீர்த்தம்” என்றும் அழைக்கப்படுகிறது. இங்குள்ள சங்கு தீர்த்தக் குளத்தில், 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை சங்கு தானாகவே தோன்றுவதாக ஒரு ஐதீகம் உள்ளது. ஷேர்!

News August 10, 2025

செங்கல்பட்டு: 10th முடித்தவர்களுக்கு சூப்பர் வாய்ப்பு!

image

‘தங்க நகை மதிப்பீட்டாளர் பயிற்சி’ வரும் 18ம் தேதி முதல் 22ம் தேதி வரை சென்னையில் நடைபெற உள்ளது. இப்பயிற்சியில் நகையின் தரம், போலி நகைகளை அடையாளம் காணும் முறைகள் கற்றுத்தரப்படும். 10th முடித்தவர்கள் <>கிளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு 9543773337, 9360221280 எண்ணை அழைக்கவும். இப்பயிற்சி முடித்தால் வங்கிகளில் வேலை, நகைக்கடை, நகை அடகு கடை வைப்பது போன்ற தொழில்களுக்கு உதவியாக இருக்கும்.ஷேர் பண்ணுங்க மக்களே!

News August 10, 2025

செங்கல்பட்டு மக்களுக்கு குட்-நியூஸ்!

image

சுதந்திர தினத்தையொட்டி 4 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. எழும்பூர் – செங்கோட்டை, சென்ட்ரல் – போத்தனூர், தாம்பரம் – நாகர்கோயில், மங்களூரு – திருவனந்தபுரம் ஆகிய 4 ரயில்கள் இயக்கப்பட உள்ளன. ஆகஸ்ட் 14, 16, 17 ஆகிய தேதிகளில் இயக்கப்பட உள்ளது. முன்பதிவு தொடங்கிவிட்டதால் உடனே புக் பண்ணுங்க. அனைவருக்கும் ஷேர் செய்து தெரியப்படுத்துங்கள்!<<17359009>>தொடர்ச்சி<<>>

error: Content is protected !!