News August 9, 2024
தாம்பரத்தில் விரைவு ரயில்கள் நிற்காது

பராமரிப்பு பணிகள் காரணமாக தாம்பரம் ரயில் நிலையத்தில் ஆகஸ்ட் 15, 16, 17 ஆகிய 3 நாட்கள் விரைவு ரயில்கள் நிற்காது என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. தாம்பரத்தில் விரைவு ரயில்கள் நிற்காது என்றாலும் பயணிகளின் வசதிக்காக மாம்பலம், செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் விரைவு ரயில்கள் நின்று செல்லும் என தெற்கு ரயில்வே கூறியுள்ளது. SHARE IT
Similar News
News October 16, 2025
கிளாம்பாக்கம்: தீபாவளி சிறப்பு பேருந்துகள் அறிவிப்பு!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இன்று முதல் (அக்.16) சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு பயணிகள் சிரமமின்றி செல்வதற்கு வசதியாக வழக்கமான மாநகர பேருந்துகளுடன் 275 சிறப்பு இணைப்பு பேருந்துகள் இன்று முதல் அக்.19ம் தேதி வரை இயக்கப்படுகிறது. வெளியூர் பேருந்துகள் செல்லும் இடம், அவை நிற்கும் பிளாட்பாரம் எண் மேலே கொடுக்கப்பட்டுள்ளது. பயணிகள் பயன்படுத்திக் கொள்ளலாம்.
News October 16, 2025
செங்கல்பட்டு: இனி அலைச்சல் வேண்டாம், ஒரு மெசேஜ் போதும்!

செங்கல்பட்டு மக்களே கேஸ் சிலிண்டரை புக்கிங் செய்ய போனில் இருந்து ஒரு SMS அனுப்பினாலே போதும். இண்டேன் சிலிண்டர் பயன்படுத்துவோர் ‘REFILL’ என டைப் செய்து 77189 55555 என்ற எண்ணுக்கு அனுப்ப வேண்டும். இதுவே பாரத் சிலிண்டர் பயன்படுத்துவோர் 18002 24344 என்ற எண்ணுக்கும், எச்.பி. சிலிண்டர் பயன்படுத்துவோர் 1906 என்ற எண்ணுக்கு மெசேஜ் அனுப்பி அலைச்சல் இல்லாமல் கேஸ் சிலிண்டரை ஈசியாக புக்கிங் செய்யலாம்.
News October 16, 2025
செங்கை: G Pay / PhonePe / Paytm பயனாளர்கள் கவனத்திற்கு!

தற்போதைய டிஜிட்டல் யுகத்தில், UPI பண பரிவர்த்தனைகள் மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளன. இந்நிலையில், உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். மேலும், அருகில் உள்ள வங்கியையும் அணுகலாம். SHARE பண்ணுங்க!