News May 23, 2024

தாமிரபரணி நதிக்கு 21 வகை அபிஷேகம்!

image

வைகாசி விசாக தினத்தில் தாமிரபரணி நீர் தோன்றிய நாளாக கருதி பல்வேறு வழிபாடு நிகழ்ச்சிகள் நடத்தப்படுவது வழக்கம். இதன்படி நேற்று(மே 22) நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் பாயும் தாமிரபரணி நதிக்கரையில் பல்வேறு இடங்களில் இந்த சிறப்பு வழிபாடு நடைபெற்றது. முத்தாலக்குறிச்சி தாமிரபரணியில் பூரணகும்பம் ஊர்வலமாக எடுத்து வந்து தாமிரபரணிக்கு 21 அபிஷேகம் மற்றும் சிறப்பு தீபாரதனை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

Similar News

News July 5, 2025

நெல்லை இஸ்ரோ மையத்தில் ககன்யான் சோதனை வெற்றி

image

நெல்லை காவல்கிணறு மகேந்திரகிரி இஸ்ரோ மையத்தில், மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்திற்கான எஸ்எம்எஸ்டிஎம் மாடல் இன்ஜின் 4-ம் கட்ட பரிசோதனை 130 வினாடிகள் வெற்றிகரமாக நடைபெற்றதாக இஸ்ரோ நேற்று (ஜூலை 4, 2025) தெரிவித்தது. முதல் கட்டமாக 30 வினாடிகள், இரண்டாம் கட்டமாக 100 வினாடிகள் சோதனை நடந்த நிலையில், இந்த வெற்றியால் இஸ்ரோ வட்டாரம் மகிழ்ச்சியடைந்துள்ளது.

News July 5, 2025

நெல்லையில் 100% மானியம் பெற அழைப்பு

image

தமிழக அரசு தொடங்கிய “ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கத்தை” முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். நெல்லை மாவட்டத்தில் தக்காளி, வெண்டைக்காய், மிளகாய் விதைகள் மற்றும் பப்பாளி, கொய்யா, எலுமிச்சை பழச்செடிகள் 100% மானியத்தில் வழங்கப்படும். மொத்தம் 34,350 காய்கறி விதைத் தொகுப்புகள், 21,150 பழச்செடிகள் விநியோகிக்கப்பட உள்ளன. விவசாயிகள் வேளாண்மை உதவி இயக்குநரை தொடர்பு கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளனர்.

News July 5, 2025

மூலைக்கரைப்பட்டியில் கடன் வசூலிக்க சென்றவர் மீது தாக்குதல்

image

மூலைக்கரைப்பட்டியைச் சேர்ந்த விவசாயி பிரின்ஸ், வண்ணாரப்பேட்டை வங்கியில் பெற்ற டிராக்டர் கடனின் மூன்று மாத தவணையை செலுத்தவில்லை. இதையடுத்து, வங்கி ஊழியர் மாரியப்பன் நேற்று (ஜூலை.04) கடன் தொகை கேட்டு பிரின்ஸை அணுகியபோது, பிரின்ஸ் அவரை தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில், மூலைக்கரைப்பட்டி காவல்துறையினர் பிரின்ஸை வலைவீசி தேடி வருகின்றனர்.

error: Content is protected !!