News October 13, 2025
தாமல் ஏரியை ஆய்வு செய்த அமைச்சர் காந்தி

காஞ்சிபுரம் மாவட்டத்தின் மிகப்பெரிய ஏரிகளில் ஒன்றான தாமல் ஏரி தனது முழு கொள்ளளவான 18 அடியை நிரம்பி உபரி நீர் வெளியேறி வருகிறது. தாமல் ஏரியை கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி இன்று ஆய்வு செய்தார். இந்த நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன், காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன், ஒன்றிய குழு தலைவர் மலர்கொடி குமார், உள்ளிட்ட அரசு அதிகாரிகள் உடன இருந்தனர்.
Similar News
News October 13, 2025
காஞ்சிபுரம்: ஆதார் கார்டில் இதை செய்துவிட்டீர்களா?

காஞ்சிபுரம் மக்களே! உங்கள் ஆதார் கார்டுடன் Address Proof-ஐ இணைத்து விட்டீர்களா? இல்லையெனில், இந்த இணையத்தளத்தில் இணைத்துக் கொள்ளுங்கள். இதன் மூலம் உங்கள் ஆதார் சேவையை எளிதாகவும், வேகமாகவும் பெற முடியும். Address Proof-காக ரேஷன் கார்டு, பான் கார்டு, லைசன்ஸ், பாஸ்போர்ட், EB, கேஸ், குடிநீர் கட்டண ரசீது போன்றவற்றை பயன்படுத்தலாம். மேலும் தகவல்களுக்கு 1947 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க.
News October 13, 2025
இருமல் மருந்து நிறுவனத்தின் உரிமம் ரத்து

காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரத்தில் இயங்கி வந்த ஸ்ரீசன் இருமல் மருந்து நிறுவனம் தயாரித்த மருந்தை அருந்திய 23 குழந்தைகள் உயிரிழந்தனர். இதன் காரணமாக இருமல் மருந்தை தயாரித்த ஸ்ரீசன் நிறுவனத்தின் உரிமம் ரத்து செய்துள்ளது. மேலும் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மருந்து தயாரிப்பு நிறுவனங்களிலும் விரிவான ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருவதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
News October 13, 2025
காஞ்சி: ரூ.5 லட்சம் இலவச மருத்துவ காப்பீடு!

காஞ்சி மக்களே, முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், 1 குடும்பம் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு பெறலாம். குடும்ப அட்டை, ஆதார் அட்டை, வருமானச் சான்றிதழ் ஆகியவற்றுடன் காஞ்சி ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மருத்துவ அடையாள அட்டை வழங்கும் மையத்தில் பதிவு செய்து, அடையாள அட்டையை பெற்றுக் கொள்ளலாம். மேலும் தகவல்களுக்கு 1800 425 3993 அழைக்கவும். ஷேர் பண்ணுங்க.