News October 13, 2024
தவெக மாநாட்டிற்கு 27 ஒருங்கிணைப்பு குழு

விக்கிரவாண்டி அடுத்த வி.சாலையில் தவெக முதல் மாநாடு அக்.27ஆம் தேதி நடைபெற உள்ளது. இம்மாநாட்டு பணிகளை கவனிப்பதற்காக, மகளிா் பாதுகாப்புக் குழு, சட்ட நிபுணா் குழு, நிகழ்ச்சி ஒருங்கிணைப்புக் குழு உள்பட 27 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு குழுவுக்கும் தலைவா்கள் நிா்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனா். போக்குவரத்தை சீர்செய்ய 104 போ் கொண்ட ஒருங்கிணைப்புக்குழு அமைத்து தவெக தலைவர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.
Similar News
News August 19, 2025
விழுப்புரம் : B.E படித்தவர்களுக்கு ஏர்போர்ட் வேலை!

இந்திய விமான நிலைய ஆணையத்தில் பல்வேறு பிரிவுகளில் உள்ள 976 ஜூனியர் நிர்வாகி பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. கட்டக்கலை, சிவில், எலெக்ட்ரிக்கல், எலெக்ட்ரானிக்ஸ், தகவல் தொழில்நுட்பம் ஆகிய பிரிவுகளில் பி.இ, பி.டெக், எம்.சி.ஏ மற்றும் கேட் தேர்வில் வெற்றி பெற்ற பட்டதாரிகள் நியமிக்கப்பட உள்ளனர். ரூ.40,000 – ரூ.1,40,000 வரை சம்பளம். செப்.27ம் தேதி கடைசிநாள் <
News August 19, 2025
பௌத்தர்கள் புனித யாத்திரைக்கு மானியம் பெற விண்ணப்பம்

விழுப்புரம் மாவட்டத்தில் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில், நாக்பூரில் நடைபெற உள்ள தம்ம சக்கர பரிவர்த்தனை திருவிழாவிற்கு சென்று திரும்பும் 150 பௌத்தர்களுக்கு, தமிழக அரசு தலா ரூ.5000 வரை மானியம் வழங்குகிறது. மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் கட்டணம் இன்றி விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளலாம். வருகின்ற நவ.30 விண்ணப்பிக்க கடைசி நாள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News August 19, 2025
விழுப்புரம் மாவட்ட சுகாதாரத்துறை மாதாந்திர ஆய்வுக் கூட்டம்

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று(ஆக.18) மாவட்ட சுகாதாரத்துறை மாதாந்திர ஆய்வு கூட்டம், மாவட்ட ஆட்சியர் ஷே.ஷேக் அப்துல் ரகுமான் தலைமையில் நடந்தது. இக்கூட்டத்தில் அரசு மருத்துவமனை கட்டிடங்களின் தரம், உபகரணங்கள், தளவாடப் பொருட்கள் மற்றும் தேவையான மருந்து இருப்புகள் பற்றி ஆலோசிக்கப்பட்டது. உடன் சுகாதார இயக்குனர் ரமேஷ்பாபு உட்பட பலர் பங்கேற்றனர்.