News October 24, 2024
தவெக. மாநாட்டிற்காக வழக்கறிஞர்கள் நியமனம்

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநில மாநாடு வரும் 27ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் பங்கேற்கும் கட்சித் தொண்டர்களுக்கு, சட்ட ரீதியாக உதவிடும் வகையில் 234 தொகுதிகளுக்கும் பொறுப்பு வழக்கறிஞர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே, பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு மாநாட்டுப் பணிகள் முழுவீச்ல் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
Similar News
News January 28, 2026
விழுப்புரம் அருகே துடிதுடித்து தொழிலாளி பலி!

விக்கிரவாண்டி அருகே பனையபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சரத்குமார் இவர் விழுப்புரம் காய்கறி மார்க்கெட்டில் சுமை தூக்கும் தொழிலாளியாக இருந்து வருகிறார். லாரியிலிருந்து மூட்டைகளை இறக்க லாரியில் ஏற முயன்ற சரத்குமார் மின்சார கம்பியில் உரசி தூக்கி வீசப்பட்டு உயிரிழந்தார். இது தொடர்பாக தாலுக்கா காவல் நிலையம் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
News January 28, 2026
விழுப்புரத்தில் பயங்கர தகராறு!

ஆவுடையார்பட்டு கிராமத்தைச் சேர்ந்த சுந்தரமூர்த்தி அதே கிராமத்தை சேர்ந்த விழுப்புரம் அரசு கல்லூரி மாணவரான சஞ்சய் சுந்தரமூர்த்தியிடம் சென்று சிகரெட் தரும்படி கேட்டுள்ளார்.அதற்கு சுந்தரமூர்த்தி வயது வித்தியாசம் பார்க்காமல் ஏன் என்னிடம் கேட்கின்றாய் என்று கேட்டதற்கு ஆதாரம் அடைந்த சஞ்சய் உருட்டு கட்டையால் அவரை தாக்கியுள்ளார்.இது குறித்த புகாரில் வழக்கு பதிவு செய்த போலீசார் சஞ்சயை கைது செய்தனர்.
News January 28, 2026
விழுப்புரம்: இரவு ரோந்து காவலர்கள் விவரம்!

விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று (ஜன.27) இரவு முதல் இன்று (ஜன.28) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில் உள்ளவர்களில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ, 100 என்ற எண்ணுக்கு அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!


