News November 25, 2025
தவெகவில் இணைகிறாரா அதிமுக EX எம்பி?

அதிமுக EX MP கே.சி.பழனிசாமியுடன் தவெக தரப்பு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. 2018-ல் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட இவர், EPS-ஐ தொடர்ச்சியாக விமர்சித்து வருகிறார். 1984-ல் MGR-ன் ஆட்சியில் MLA-வாக(காங்கேயம் தொகுதி) இருந்த இவருக்கு இன்றளவும் திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் கணிசமான செல்வாக்கு உள்ளது. அதனால், அவரை கட்சியில் இணைக்க தவெக தரப்பு முயல்வதாக கூறப்படுகிறது.
Similar News
News November 25, 2025
பிராமண பெண்கள் குறித்து IAS சர்ச்சை பேச்சு

ஒரு பிராமணர் தனது மகளை என் மகனுக்கு கன்னிகாதானம் செய்யும் வரை (அ) காதலிக்கும் வரை இடஒதுக்கீடு தொடர வேண்டும் என ம.பி.,ஐ சேர்ந்த IAS அதிகாரி சந்தோஷ் வர்மா கூறியுள்ளார். IAS அதிகாரியின் கருத்து பிராமண பெண்களை அவமதிப்பதாக உள்ளதாகவும், அவர் மீது FIR போட வேண்டும் எனவும் பிராமண சமாஜ் இயக்கம் வலியுறுத்தியுள்ளது. இல்லையெனில் மாநிலம் தழுவிய போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
News November 25, 2025
புஸ்ஸி, ஆதவ்விடம் CBI துருவி துருவி கேட்ட கேள்விகள்

கரூர் விவகாரத்தில் புஸ்ஸி ஆனந்த் & ஆதவ் அர்ஜுனாவிடம் நேற்று 10 மணி நேரம் CBI விசரணை நடத்தியுள்ளது. இதில், கூட்டத்திற்கு எந்தெந்த மாவட்டத்தில் இருந்து தொண்டர்கள் வந்திருந்தனர், ஏற்பாடுகளை கவனித்த நிர்வாகிகள் யார், மக்களுக்கு தண்ணீர், சாப்பாடு ஏன் வழங்கவில்லை, ஏன் 12 மணிக்கே விஜய் வருவார் என அறிவித்தீர்கள் என பல கேள்விகளை கேட்டுள்ளனர். இந்நிலையில், இன்று மீண்டும் அவர்களிடம் விசாரணை நடக்கவுள்ளது.
News November 25, 2025
புஸ்ஸி, ஆதவ்விடம் CBI துருவி துருவி கேட்ட கேள்விகள்

கரூர் விவகாரத்தில் புஸ்ஸி ஆனந்த் & ஆதவ் அர்ஜுனாவிடம் நேற்று 10 மணி நேரம் CBI விசரணை நடத்தியுள்ளது. இதில், கூட்டத்திற்கு எந்தெந்த மாவட்டத்தில் இருந்து தொண்டர்கள் வந்திருந்தனர், ஏற்பாடுகளை கவனித்த நிர்வாகிகள் யார், மக்களுக்கு தண்ணீர், சாப்பாடு ஏன் வழங்கவில்லை, ஏன் 12 மணிக்கே விஜய் வருவார் என அறிவித்தீர்கள் என பல கேள்விகளை கேட்டுள்ளனர். இந்நிலையில், இன்று மீண்டும் அவர்களிடம் விசாரணை நடக்கவுள்ளது.


