News March 9, 2025
தவறான வதந்திகளை பரப்புபவர்கள் மீதுகடும் நடவடிக்கை

தூத்துக்குடி மாவட்டத்தில் அணுக்கழிவு கொட்டுவதாக தவறான வதந்திகளை பரப்புபவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. இத்தகைய ஆதாரமற்ற வதந்திகளை நம்பவோ அல்லது பரப்பவோ வேண்டாம் என்றும் மீறினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பாக கேட்டுக் கொள்ளப்படுகிறது.
Similar News
News March 10, 2025
தூத்துக்குடி அருகே 300 ஆவது நாள் போராட்டம்

தூத்துக்குடி மாவட்டம் வாகைக்குளம் அருகே உள்ள பொட்டலூரணியில் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் கழிவுமீன் நிறுவனங்களை மூடிவிட வலியுறுத்தி போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நாளை (10.03.2025) 300 ஆவது நாளை முன்னிட்டு கூட்டம் நடைபெற உள்ளது என போராட்டக்குழு அறிவித்துள்ளது. இதில் பல்வேறு அரசியல் மற்றும் அமைப்புகளின் நிர்வாகிகள் பங்கேற்க உள்ளனர்.
News March 9, 2025
அடுத்த வாரத்தில் நிலப்பரப்பு பறவைகள் கணக்கெடுப்பு

தூத்துக்குடி மாவட்டத்தில் நிலப்பரப்பு பறவைகள் கணக்கெடுக்கும் பணிகள் அடுத்த வாரம் மார்ச்.15 மற்றும் 16 ஆம் தேதிகளில் நடைபெற உள்ளன. மார்ச் 8, 9 தேதிகளில் ஈரநிலப் பறவைகளின் கணக்கெடுப்பு நடைபெற்றது. இயற்கை ஆர்வலர்கள், பறவை கண்காணிப்பாளர்கள், வனவிலங்கு புகைப்படக் கலைஞர்கள், தன்னார்வலர்கள் கலந்து கொள்ளலாம் என அறிவிப்பு வெளியானது குறிப்பிடத்தக்கது.
News March 9, 2025
தூத்துக்குடி மக்களை கவர்ந்த பொறித்த பரோட்டா

தூத்துக்குடியில் அனைவருக்கும் பிடித்தமான உணவில் கண்டிப்பாக பொறித்த பரோட்டா வரும். இங்கு வீதிக்கு வீதி பொறித்த பரோட்டா கடை உண்டு. இந்த பரோட்டாவிற்கென தயாரிக்கும் சால்னா அனைவரின் நாவையும் கட்டுப்படுத்தி வைக்கும். 3 வகையான சால்னா, வெங்காயம் தான் பொறித்த பரோட்டாவிற்கு செம்ம காம்பினேசன். சில கடைகளில் கொடுக்கப்படும் பீப் சால்னா அல்டிமேட் தான். *பொறித்த பரோட்டா சாப்பிடாத நண்பருக்கு பகிரவும்*