News April 25, 2025
தவறாக நடக்க முயன்றதால் ஆத்திரத்தில் கொலை

ராமேஸ்வரத்தை சேர்ந்த நம்புராஜன் என்பவர் ஒரு மாதத்திற்கு முன்பு மாயமான நிலையில் அவரது அக்காள் ராணி போலீசில் புகார் அளித்தார். இதில் போலீசார் நடத்திய விசாரணையில் 1 மாதத்திற்கு முன்பு நம்புராஜன் அவருடைய நண்பருடன் மது அருந்திய போது மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணிடம் நம்புராஜன் தவறாக நடக்க முயன்றதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அவரது நண்பர் நம்புராஜனை கொலை செய்து உடலை புதைத்தது தெரியவந்துள்ளது.
Similar News
News September 15, 2025
ராமநாதபுரம்: ரூ.1 லட்சம் வாங்கி இலங்கை கூட்டி சென்ற மீனவருக்கு வலை

இலங்கை மன்னார் சேர்ந்த தாஸ் நேவிஸ் 43, மனைவி ரஜினி 42, மகன் யோசுவா 15, மகள்கள் ஏஞ்சலின் 14, அன்சிகா 8, மற்றும் சிவனேஸ்வரன் 50, ஆகியோர் 2022 ஜூன் 17ல் படகு மூலம் தனுஷ்கோடி வந்து மண்டபம் முகாமில் வசித்தனர். நேற்று முன்தினம் மண்டபத்தில் இருந்து கள்ளத்தனமாக நாட்டுப்படகில் இலங்கை சென்றபோது அந்நாட்டு கடற்படையிடம் சிக்கினர்.இவர்களிடம் ரூ. 1 லட்சம் கூலி வாங்கி அழைத்த சென்ற மீனவரை போலீஸ் தேடுகின்றனர்.
News September 15, 2025
முதுகுளத்துார்: மின்சாரம் பாய்ந்து 17வயது மாணவர் பரிதாப பலி

முதுகுளத்துார் பகுதியை சேர்ந்தவர் ராமசுப்பிரமணியன் மகன் ஹரிகார்த்திகேயன் 17, பிளஸ் 2 படித்தார். வெங்கலக்குறிச்சி கிராமத்தில் முருகன் கோயில் அருகே புதிதாக வீடு கட்டி வருகின்றனர்.வீட்டிற்கு தண்ணீர் கொண்டு செல்வதற்காக மின்மோட்டார் பயன்படுத்தினர். அப்போது சுவிட்சை அணைக்காமல் மின் மோட்டாரை ஹரிகார்த்திகேயன் தொட்ட போது மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே பலியானார். போலீசார் விசாரிக்கின்றனர்.
News September 15, 2025
ராமநாதபுரம்: டிகிரி முடித்தால் ரூ.35,000 சம்பளத்தில் வேலை

ராமநாதபுரம் மக்களே தமிழ்நாடு கிராம வங்கியில் காலியாக உள்ள் 7,972 அலுவலக உதவியாளர்கள் பணியிடங்களுக்குஅறிவிப்பு வெளியாகியுள்ளது. ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். 18 முதல் 28 வயதுக்குள் இருக்க வேண்டும். சம்பளம் ரூ.35,000 வழங்கப்படுகிறது. தகுதியானவர்கள் <