News September 12, 2025

தல்லாகுளம் பெருமாள் கோவிலில் புரட்டாசி பெருந்திருவிழா

image

மதுரை அழகர் கோவில் உபகோவில் ஆன தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜலபதி பெருமாள் கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் மிக முக்கியமான புரட்டாசி பெருந் திருவிழா வருகிற 24ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது. தொடர்ந்து முகூர்த்த நாள் நடப்படும். தொடர்ந்து அக்டோபர் இரண்டாம் தேதி திருத்தேரோட்டம் நடைபெறும் தெப்ப உற்சவம் நான்காம் தேதி நடைபெறுகிறது.

Similar News

News September 12, 2025

மதுரை அருகே 8 வயது பள்ளி சிறுமி பலியான சோகம்

image

பாலமேடு அருகே குட்லாடம்பட்டி அருவி அருகே கரடிக்கல் பகுதி தென்னை மரம் ஏறும் கூலித்தொழிலாளி கோட்டைச்சாமி. இவரது மூத்த மகள் நவீசா 8, டி.மேட்டுப்பட்டி அரசு பள்ளியில் 3ம் வகுப்பு படித்தார். நேற்று பள்ளி முடிந்து தனியார் வாடகை வேனில் வந்து வீட்டின் முன் இறங்கினார். அப்போது நவிசாவின் சீருடை கதவில் சிக்கியதால் கீழே விழுந்த நவிசா மீது பின் டயர் ஏறி இறங்கியதில் இறந்தார். போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News September 12, 2025

மதுரை: ரேஷன் கார்டு இருக்கா? இதை பண்ணுங்க!

image

மதுரை மக்களே ரேஷன் கடை திறந்திருக்கிறதா என்பதை இனி வீட்டிலிருந்தபடியே தெரிந்துகொள்ளலாம். உங்கள் ரேஷன் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து PDS 102 என டைப் செய்து 9773904050 என்ற எண்ணுக்கு SMS அனுப்பினால், ரேஷன் கடை திறந்திருப்பது குறித்த தகவல் உங்களுக்கு மெசேஜாக வரும். புகார்களைப் பதிவு செய்ய PDS 107 என டைப் செய்து அதே எண்ணுக்கு அனுப்பலாம். தெரிந்தவர்களுக்கு மறக்காம SHARE பண்ணுங்க.

News September 12, 2025

மதுரை அருகே கிணற்றில் கிடந்த பச்சிளம் குழந்தை..கொடூர செயல்..!

image

திருமங்கலத்தில் இருந்து ராஜபாளையம் வரை நான்கு வழி சாலை பணிகள் நடைபெற்று வருகின்றன.டி.கல்லுப்பட்டி அருகே எல்.கொட்டாணிபட்டி பிரிவு நான்கு வழிச்சாலை ரோடு ஓரம் ஒரு விவசாய கிணறு உள்ளது. இந்தக் கிணற்றை மூடுவதற்காக பேரையூர் தாசில்தார் செல்லப்பாண்டி ஆய்வு செய்ய சென்றார். அப்போது கிணற்றில் பச்சிளம் ஆண் குழந்தையின் சடலம் கிடந்ததை கண்டு அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து போலீசார் விசாரிகின்றனர்.

error: Content is protected !!