News May 24, 2024

தலைமை காவலர் காலில் பாய்ந்த துப்பாக்கி குண்டு

image

சென்னை ரயில்வே பாதுகாப்பு படை தலைமை காவலரின் காலில், துப்பாக்கி குண்டு பாய்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ரயில்வே கோட்ட மேலாளர் அலுவலகத்தில் துப்பாக்கியை சரிபார்க்கும் போது உதவி ஆய்வாளர் தவறுதலாக விசையை அழுத்தியதில், எதிரே இருந்த தலைமை காவலர் சிவக்குமாரின் கால் முட்டியில் குண்டு பாய்ந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து சென்னை ரயில்வே கோட்ட பாதுகாப்பு படை ஆணையர் விசாரிக்கின்றார்.

Similar News

News March 4, 2026

குஜராத் வரை சென்று அதிரடி காட்டிய சென்னை போலீஸ்!

image

சென்னை பூக்கடை ரெட்டி ராம் தெருவில் ஜன.25 ஆம் தேதி கடை ஷட்டர் பூட்டை உடைத்து, ரமேஷ்குமார் ஜெயின் (55) கடையில் ₹1,30,000 மற்றும் எதிர்கடையில் ₹65,000 திருடப்பட்டதாக C-1 பூக்கடை போலீசில் புகார் அளிக்கப்பட்டது. சிசிடிவி பதிவுகள் அடிப்படையில் விசாரணை நடத்திய போலீசார், ராஜஸ்தான் மற்றும் குஜராத் மாநிலங்களில் பதுங்கியிருந்த ஈஸ்வர் (42), கன்பத் சிங் (38) ஆகிய இருவரை நேற்று கைது செய்தனர்.

News March 4, 2026

விரைவில் வேளச்சேரி – பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை!

image

சென்னை பிரிவில் புதிதாக கட்டப்பட்ட வேளச்சேரி – பரங்கிமலை பறக்கும் ரயில் பாதைகளை தில்லி ரயில்வே பாதுகாப்பு தலைமை ஆணையர் ஜனக் குமார் கார்க் மார்ச் 5ஆம் தேதியன்று ஆய்வு மேற்கொள்ள உள்ளார். அதே நாள் மதியம் 1.30 மணி முதல் மாலை 6.00 மணி வரை அதிவேக சோதனை ஓட்டமும் நடைபெறும். மேலும், மார்ச் 10 முதல் இந்த வழித்தடத்தில் ரயில்கள் இயக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

News March 3, 2026

பள்ளிக்கரணை சதுப்பு நிலம்: NGT உத்தரவை எதிர்த்து வழக்கு

image

பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை சுற்றி 1 கி.மீ. சுற்றளவில் புதிய கட்டுமானங்களுக்கு ஒப்புதல் வழங்க தேசிய பசுமை தீர்ப்பாய (NGT) தடை பிறப்பித்தது. இந்த உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்த வழக்கில், 3 வாரங்களில் தமிழக அரசு மற்றும் பெருநகர வளர்ச்சி குழுமம் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. தீர்ப்பாய உத்தரவால் கட்டுமானப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக மனுதாரர் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

error: Content is protected !!