News August 6, 2025
தலைமறைவாக இருந்த குற்றவாளி கைது

பள்ளிப்பாளையம் அருகே, வெடியரசம்பாளையம் பகுதியில் 2022ல் வயதான தம்பதியை கட்டிப்போட்டு 30 லட்சம் ரூபாயை சிலர் கொள்ளையடித்து சென்றனர். இந்த கொள்ளை வழக்கில் சம்பந்தப்பட்ட கோபாலகிருஷ்ணன் ஜாமினில் வெளியே வந்த பிறகு நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்தார். இவர் கமுதி பகுதியில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அங்கு சென்ற பள்ளிப்பாளையம் போலீசார், கோபாலகிருஷ்ணனை கைது செய்தனர்.
Similar News
News November 7, 2025
நாமக்கல்: உழவர் நல சேவை மையம் அமைக்க விருப்பமா?

நாமக்கல்: முதலமைச்சரின் உழவர் நல சேவை மையம் அமைக்க தோட்டக்கலை, வேளாண்மை, வேளாண் வணிகம், பொறியியல் பட்டப்படிப்பு மற்றும் பட்டயப்படிப்பு பயின்றவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் உழவர் நல சேவை மையம் தொடங்க விரும்பும் நபர்கள், திருச்செங்கோடு வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தினை தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என வேளாண் அதிகாரிகள் தெரிவித்தனர். SHARE பண்ணுங்க!
News November 7, 2025
நாமக்கல்: பட்டா வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு!

நாமக்கல் மக்களே, நில ஆவணங்கள் அனைத்தும் கணினிமயமாக்கப்பட்டு, பொதுமக்கள் எளிதாகப் பயன்படுத்தும் வகையில் eservices.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது. இந்த இணையத்தில் உங்கள் நிலம் தொடர்பான விவரங்களை அறியலாம். மேலும் பட்டாவில் திருத்தம், பெயர் மாற்றம், நீக்கம் போன்ற சேவைகளுக்கு இதன் மூலமாக விண்ணப்பிக்கலாம். (SHARE பண்ணுங்க)
News November 7, 2025
நாமக்கல்: டிகிரி போதும்.. ரூ.1 லட்சம் சம்பளம்!

நாமக்கல் மக்களே, மத்திய புலனாய்வுத் துறையில் Grade-2 அதிகரிக்கான 258 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு, எலெக்ட்ரிக்கல், எலெக்ட்ரானிக்ஸ், டெலி கம்யூனிகேஷன், கம்யூனிகேஷன், தகவல் தொழில்நுட்பம், கணினி அறிவியல் ஆகிய பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். சம்பளமாக ரூ.44,900 முதல் ரூ.1,42,400 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் நவ.16-க்குள் இங்கு <


