News August 20, 2024
தலித் விடுதலை இயக்கம் சார்பில் புகார் மனு

தலித் விடுதலை இயக்கம் சார்பில் இன்று மதுரை ஆட்சியர் சங்கீதாவிடம் மனு அளித்தனர். அதில் வன்கொடுமையில் பாதிக்கப்பட்டோருக்கு கடந்த பிப்.1 வரை மதுரை மாவட்டத்தில் 42 வழக்குகளில் 49 பேருக்கு ரூ.13 ஆயிரத்து 200 வழங்கப்பட்டது. இத்தொகை கடந்த பிப்.21 க்கு பின்பு ரூ.7500 ஆக குறைக்கப்பட்டுள்ளது. இதேபோல கடந்த 6 மாதங்களாக பலருக்கும் வழங்கப்பட்டு வந்த ஓய்வூதியம் நிறுத்தி வைத்துள்ளதாக புகார் அளிக்கப்பட்டது.
Similar News
News April 5, 2026
BREAKING மேலூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் அறிவிப்பு

தமிழகத்தில் ஏப்.23 அன்று தேர்தல் நடைபெற உள்ள நிலையில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 28 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதில் 27 வேட்பாளர்கள் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில் மேலூர் தொகுதிக்கு மட்டும் வேட்பாளர் அறிவிக்காமல் இருந்தது. இந்நிலையில் மேலூர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக விஸ்வநாதன் போட்டியிடுவார் என காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் அறிவித்துள்ளார்.
News April 5, 2026
மதுரை மக்களே ஒரு SMS எல்லா பிரச்சனைக்கும் தீர்வு

மதுரை மாநகராட்சி சார்பில், தெரு விளக்கு, குடிநீர், பாதாள சாக்கடை பிரச்சனை, சாலை சம்பந்தப்பட்ட பல்வேறு பிரச்சினைகளுக்காக 78716-61787 என்ற புகார் எண் அறிவிக்கப்பட்டுள்ளது. தொலைபேசி மற்றும் whatsapp வாயிலாகவோ தொடர்பு கொண்டு தங்களது குறைகளை புகார் தெரிவிக்கலாம் இதில் உடனடியாக தீர்வு அளிக்கப்படும் என்று மதுரை மாநகராட்சி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.தெரியாதவர்களுக்கு SHARE செய்து உதவவும்.
News April 5, 2026
மதுரை: இனி BANK ல வரிசையில் நிற்க வேண்டாம்

மதுரை மக்களே, கீழே உள்ள எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்பினா உங்க Account Balance, Statement, Loan info எல்லாம் உங்கள் வாட்ஸ்அப்பில் வந்துவிடும். இனி வங்கிக்கு செல்ல வேண்டாம்!
1. SBI – 90226 90226
2. Canara Bank – 90760 30001
3. Indian Bank – 87544 24242
4. IOB – 96777 11234
5. HDFC – 70700 22222
மற்றவர்களும் தெரிஞ்சுக்க ஷேர் செய்யுங்க…


