News July 24, 2024

தர்மபுரி – மொரப்பூர் ரயில் எப்போது?

image

தர்மபுரி மாவட்டம் மக்களின் 80 ஆண்டு கனவு திட்டமான, தர்மபுரி – மொரப்பூர் ரயில் திட்டம் கிடப்பில் உள்ளது. இந்த ரயில் திட்டம் பயன்பாட்டுக்கு வந்தால், மாவட்ட மக்கள் போக்குவரத்துக்கு எளிதாக இருக்கும். மத்திய அரசு மாநில அரசும் நடவடிக்கை எடுத்து, அடுத்த பட்ஜெட்டிலாவது தர்மபுரி-மொரப்பூர் ரயில்பாதை திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்க வேண்டுமென மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

Similar News

News March 5, 2026

தருமபுரி இளைஞர்களுக்கு இலவச திறன் பயிற்சி அறிவிப்பு!

image

தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் வழங்கும் PMKVY 4.0 திட்டத்தின் கீழ் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு இலவச திறன் பயிற்சி வழங்கப்படுகிறது. இதில் தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் இந்த இலவச பயிற்சி வழங்கப்படுகிறது. இதற்கு 10ம் வகுப்பு முடித்த 18 முதல் 45 வயது உடையவர்கள் விண்ணப்பிக்கலாம், என மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை அலுவலர் தெரிவித்துள்ளார்.

News March 4, 2026

தருமபுரி: வாழ்க்கையில் எதிர்ப்புகள் நீங்கி வெற்றி பெற..!

image

தருமபுரி-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள அதியமான் கோட்டை காலபைரவர் கோயில், தென்னகத்தின் மிகச்சிறந்த பரிகாரத் தலமாகும். நம் வாழ்வின் தீராத வினைகளையும், எதிர்ப்புகளையும் நீக்கும் சக்தி படைத்தவர் இக்கோயில் காலபைரவர். குறிப்பாக தேய்பிறை அஷ்டமி நாளில் இங்கு மிளகு தீபம் ஏற்றி வழிபட்டால், ராகு-கேது தோஷங்கள் நீங்கி, தடைபட்ட காரியங்கள் கைகூடும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை. ஷேர்!

News March 4, 2026

தருமபுரி நீதிமன்றத்தில் இலவச ஆலோசனை பெறுவது எப்படி?

image

தருமபுரி மாவட்டத்திற்கான இலவச சட்ட உதவி மையம், செங்கல்பட்டு மாவட்ட நீதிமன்றத்தில் இயங்கி வருகிறது. நீங்கள், அங்கு சென்று சட்ட ஆலோசனைகளை இலவசமாக பெறலாம். தருமபுரி மாவட்ட இலவச சட்ட உதவி மையம் -04342-233781, (தமிழ்நாடு) அவசர உதவி – 044–25342441, TOLL FREE – 1800 4252 441, சென்னை ஐகோர்ட் – 044-29550126, ஐகோர்ட் மதுரை கிளை – 0452-2433756 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளுங்கள். தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!