News August 11, 2024

தர்மபுரி மாவட்ட புதிய காவல் கண்காணிப்பாளர் பொறுப்பேற்பு

image

தருமபுரிக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள எஸ்பி சோ. மகேஸ்வரன் இன்று காலை புதிய காவல் கண்காணிப்பாளராக பொறுப்பேற்றுக்கொண்டார். மேலும், தருமபுரி மாவட்டத்தில் சட்டம் மற்றும் ஒழுங்கை தொடர்ந்து சீர்படுத்துவதிலும், பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மீது சட்டப்படி விசாரணை செய்து தீர்வு மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், போதை பொருட்களுக்கு எதிராக துரித நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

Similar News

News April 3, 2026

தருமபுரி: உங்க வேட்பாளர் சொத்து எவ்வளவு தெரியனுமா?

image

தருமபுரி மக்களே உங்க தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் தாக்கல் செய்த சொத்து, கடன் மற்றும் குற்றப் பின்னணி விவரங்களை இந்திய தேர்தல் ஆணையத்தின் <>affidavit.eci.gov.in இணையதளம்<<>> மூலம் எளிதாக அறியலாம். இதன் மூலம் வேட்பாளர்களின் கல்வி மற்றும் குற்றப் பின்னணி விவரங்களைத் தெரிந்துகொள்ளலாம். (இந்த முக்கிய தகவலை அனைவருக்கும் SHARE பண்னுங்க)

News April 3, 2026

தருமபுரி இளைஞர் உயிரிழப்பு

image

தருமபுரியைச் சேர்ந்த முகேஷ் குமார் (23), கோவையில் தங்கி தனியார் கல்லூரியில் ஐந்தாம் ஆண்டு பார்மசி பயின்று வந்தார். இவர் நேற்றிரவு தனது நண்பர்கள் 8 பேருடன் சேர்ந்து பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவிலுக்கு மலையேறச் சென்றுள்ளார். 5-வது மலையை எட்டியபோது, முகேஷ் குமாருக்குத் திடீரென கடும் நெஞ்சுவலி ஏற்பட்டு மயங்கி விழுந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

News April 2, 2026

தருமபுரி சிலிண்டர் புக்கிங் இனி ரொம்ப ஈஸி!

image

தருமபுரியில் வீட்டு எரிவாயு சிலிண்டர் பதிவு செய்ய பல்வேறு வசதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. வாட்ஸ்அப் மூலம் பதிவு செய்ய 7588888824 எண்ணை பயன்படுத்தலாம். செயலி மூலம் பதிவு செய்ய இந்தியன் ஆயில் செயலியை பயன்படுத்தலாம். எஸ்.எம்.எஸ் மூலம் 7718955555 எண்ணிற்கும், மிஸ்டு கால் மூலம் 8454955555 எண்ணிற்கும் தொடர்பு கொள்ளலாம். மேலும் பதிவு வசதி தினமும் காலை 10 – மாலை 6 மணி வரை வழங்கப்படுகிறது. ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!