News September 3, 2025

தர்மபுரி மாவட்டம் – செப்டம்பர் மாத மின்தடை அறிவிப்பு

image

தர்மபுரி மாவட்டத்தில் மின் வாரியத்தின் பராமரிப்பு மற்றும் மேம்பாட்டு பணிகள் நடைபெறவுள்ளதால், செப்டம்பர்-2025 மாதம் முழுவதும் திட்டமிட்ட நாள்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை அமல்படுத்தப்படும். மாவட்டத்தின் பல ஊரக, நகர்புற பகுதிகள் மின்தடைக்கு உட்படுகின்றன. பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளைச் செய்து கொள்ளுமாறு மின்வாரியம் கேட்டுக் கொண்டுள்ளது.

Similar News

News September 4, 2025

தர்மபுரி: தாசில்தார், VAO லஞ்சம் கேட்டால்.. இதை பண்ணுங்க

image

தர்மபுரி மக்களே சாதி, வருவாய், குடியிருப்பு & மதிப்பீடு சான்றிதழ் வாங்குவதற்கும், பட்டா மாற்றம், சிட்டா உள்ளிட்ட பல்வேறு வேலைகளுக்காக நாம் வாழ்க்கையில் கண்டிப்பாக ஒருமுறையாவது தாசில்தார் அலுவலகத்திற்கு சென்றிருப்போம். அங்கு இவற்றை முறையாக செய்யாமல் அதிகாரிகள் லஞ்சம் கேட்டால் லஞ்ச ஒழிப்புத் துறையில் (044-27426055) புகாரளிக்கலாம். இந்த நல்ல தகவலை அனைவருக்கும் SHARE செய்து தெரியப்படுத்துங்கள்.

News September 4, 2025

தருமபுரியில் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.10 கோடி கடன்.

image

தருமபுரி மாவட்டத்தில், மகளிரைச் சுயதொழில் தொடங்க ஊக்குவிக்கும் வகையில், பரோடா வங்கி சார்பில் சுயஉதவிக் குழுக்களுக்குக் கடனுதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று (செப்.3) நடைபெற்றது. இதில், மாவட்டத்தில் இயங்கி வரும் 300-க்கும் மேற்பட்ட மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு, ரூ.10 கோடி மதிப்பிலான கடனுதவி ஆணைகள் வழங்கப்பட்டன. மேலும், ஆதரவற்றோருக்கும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

News September 4, 2025

தருமபுரி: EB துறையில் சூப்பர் வேலைவாய்ப்பு

image

தருமபுரி மக்களே, தமிழ்நாடு மின்பகிர்மான கழகத்தில் காலியாக உள்ள 1,794 கள உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு ITI படித்திருந்தால் போதுமானது. சம்பளமாக ரூ.18,800 முதல் 59,900 வரை வழங்கப்படும். வயது 18 முதல் 32 வரை இருக்கலாம். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க<> இங்கு கிளிக்<<>> பண்ணுங்க. விருப்பமுள்ளவர்கள் அக்.02க்குள் விண்ணப்பிக்க வேண்டும் SHARE பண்ணுங்க

error: Content is protected !!