News November 19, 2024
தர்மபுரி மாவட்டத்தில் 336 போக்சோ வழக்குகள் பதிவு

தர்மபுரி மாவட்டத்தில் கடந்த ஆண்டு ஜனவரி 2023 முதல் டிசம்பர் 2023 வரை பாலியல் வன்கொடுமை, வளரிளம் பருவ கர்ப்பம், குழந்தை திருமணம் ஆகிய நிகழ்வுகளை ஏற்படுத்தியவர்கள் மீது 165 போக்சோ வழக்குகளும், ஜனவரி 2024 முதல் அக்டோபர் 2024 வரை பாலியல் வன்கொடுமை, வளரிளம் பருவ கர்பபம் ஆகிய நிகழ்வுகளை ஏற்படுத்தியவர்கள் மீது 171 போக்சோ வழக்குகள் பதிவாகியுள்ளதாக கலெக்டர் சாந்தி அறிக்கையில் நேற்று தெரிவித்துள்ளார்.
Similar News
News September 24, 2025
தருமபுரி அருகே லாரி டிரைவர் தூக்கிட்டு தற்கொலை

பாலக்கோடு அடுத்த பெத்தனஅள்ளி கிராமத்தை சேர்ந்த லாரி டிரைவர் மணிகண்டன் (38) வயிற்று வலியால் அவதிபட்டு வந்துள்ளார். பல இடங்களில் சிகிச்சை பெற்றும் குணமாகாததால் நேற்றிரவு வீட்டில் உள்ள மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். பாலக்கோடு போலீசார் உடலை பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி ஜி.ஹெச்-க்கு அனுப்பி விசாரித்து வருகின்றனர்.
News September 24, 2025
தர்மபுரி மாவட்ட காவல்துறை இரவு ரோந்து விபரம்

தர்மபுரி மாவட்ட காவல்துறை சார்பில் இன்று (செப்.23) இரவு ரோந்து செல்லும் காவலர்களின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. தலைமை அதிகாரியாக ராஜ்குமார் நியமிக்கப்பட்டுள்ளார். தர்மபுரி, அரூர், பென்னாகரம் மற்றும் பாலக்கோடு ஆகிய பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்கள் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்கள் தொடர்பு கொள்வதற்கு தொடர்பு எண்கள் கொடுக்கப்பட்டுள்ளன. தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க!
News September 23, 2025
தருமபுரியில் ரூ.1.12 கோடி ஓய்வூதியம் வழங்கல்

தருமபுரியில் கடந்த நான்கு ஆண்டுகளில், முகாம் வாழ் இலங்கைத் தமிழர்களுக்கான ஓய்வூதியமாக 191 நபர்களுக்கு மொத்தம் ரூ.1.12 கோடி வழங்கப்பட்டுள்ளது. இந்த ஓய்வூதிய உதவி, சமூக மற்றும் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்ட நிலையில் “இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்” தமிழகத்திற்கு வாழ்வாதாரத்திற்கான நம்பிக்கையையும் பாதுகாப்பையும் வழங்குகிறது என தருமபுரி மாவட்டம் ஆட்சியர் ரெ. சதீஷ் தெரிவித்துள்ளார்.