News November 1, 2025
தர்மபுரி மாவட்டத்தில் 241 ஊராட்சியில் கிராம சபை கூட்டம்

தர்மபுரி மாவட்டத்தில் 241 கிராம ஊராட்சிகளிலும் 01/11/2025 இன்று காலை 11.00 மணி அளவில் கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் அனைத்து ஊராட்சியில் உள்ள வாக்காளர்கள் பொது மக்கள் மகளிர் சுய உதவி குழுவினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் உட்பட அனைத்து தரப்பு மக்களும் தவறாமல் கலந்து கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் சதீஷ் தெரிவித்துள்ளார்.
Similar News
News November 1, 2025
தருமபுரி: ஆட்சியர் சொன்ன குட் நியூஸ்!

தமிழக முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தின் கீழ் 70 வயதிற்கு மேற்பட்ட வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் உட்பட 37,770 பயனாளிகளின் இல்லத்திற்கு நேரில் சென்று பொது விநியோகத் திட்ட பொருட்கள் மாதம் தோறும் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. அவ்வாறு நவம்பர் மாதத்திற்குரிய பொது விநியோகத் திட்ட பொருட்களை எதிர்வரும் நவம்பர் 3 மற்றும் 4 ஆகிய தேதி வழங்கப்படும். என தருமபுரி ஆட்சியர் அறிவித்துள்ளார்.
News November 1, 2025
தருமபுரி: மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

தருமபுரியில் இன்று (நவ.01) மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் டி.என்.வி ராஜ் மஹாலில் காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெற உள்ளது. இம்முகாமில் 125க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் பங்கேற்று ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியிடங்களை நிரப்பும் பொருட்டு, பத்தாம் வகுப்பு முதல் பட்டய படிப்பு வரை படித்து முடித்த வேலைவாய்ப்பற்றோர் பங்கேற்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
News November 1, 2025
தருமபுரி: காவல்துறை இரவு ரோந்து விபரம்

தருமபுரி மாவட்டம் முழுவதும் (அக்.31) இரவு 9 மணி முதல் இன்று காலை 6 மணி வரை ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்களின் விவரம் மாவட்ட காவல் துறையால் வெளியிடப்பட்டுள்ளது. காவலர் சூர்யா தலைமையில் ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்களின் விவரம் மற்றும் தொடர்புக்கொள்ள தொடர்பு எண்கள் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு 100 அல்லது 04342-233850 உதவி எண்ணை தொடர்பு கொள்ளவும். இதை அனைவருக்கும் ஷேர் செய்யவும்


