News September 20, 2025

தர்மபுரி: கல்லூரி மாணவரை விடிய விடிய துன்புறுத்திய 17 பேர் கைது

image

தர்மபுரி ஒட்டப்பட்டி அரசு அம்பேத்கர் மாணவர் விடுதியில், ஹெட்போன் திருடியதாகக் கூறி ஒரு மாணவரை சக மாணவர்கள் 20க்கும் மேற்பட்டோர் சேர்ந்து ஒரு அறையில் பூட்டி வைத்து இரவு முழுவதும் தாக்கியுள்ளனர். பாதிக்கப்பட்ட மாணவர் அளித்த புகாரின் பேரில், 17 மாணவர்கள் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் அதியமான்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

Similar News

News September 20, 2025

முதியோர் ஓய்வூதியத் திட்டத்தில் ரூ.193.03 கோடி வழங்கப்பட்டது

image

தருமபுரி மாவட்டத்தில் கடந்த நான்கு ஆண்டுகளில் தேசிய முதியோர் ஓய்வூதியத் திட்டத்தின்கீழ் 33,512 நபர்களுக்கு மொத்தம் ரூ.193.03 கோடி வழங்கப்பட்டுள்ளது. இத்திட்டம் முதியோரின் அடிப்படை தேவைகளைப் பூர்த்தி செய்து, அவர்களின் வாழ்க்கையில் நிம்மதியை ஏற்படுத்த உதவுகிறது என மாவட்ட ஆட்சியர் ரெ. சதீஸ் தெரிவித்தார்.

News September 20, 2025

மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ. 82.78 கோடி நிதி உதவி

image

தருமபுரி மாவட்டத்தில் கடந்த நான்கு ஆண்டுகளில், சமூக பாதுகாப்பு ஓய்வூதிய திட்டத்தின் கீழ் 11,497 ஆதரவற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.82.78 கோடி வழங்கப்பட்டுள்ளது. இந்த நிதியுதவி, மாற்றுத்திறனாளிகளின் பொருளாதாரச் சுமையைக் குறைத்து, அவர்கள் கண்ணியத்துடன் வாழ உதவுகிறது என்று மாவட்ட ஆட்சியர் ரெ. சதிஷ் அவர்கள் தெரிவித்துள்ளார்.

News September 20, 2025

தருமபுரியில் ஆதரவற்ற பெண்களுக்கு ரூ.15.11 கோடி ஓய்வூதியம்

image

தருமபுரி மாவட்டத்தில் கடந்த நான்கு ஆண்டுகளில், ஆதரவற்ற மற்றும் கணவனால் கைவிடப்பட்ட 2,624 பெண்களுக்கு ரூ.15.11 கோடி ஓய்வூதியமாக வழங்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் மூலம், பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய பெண்கள் பாதுகாப்பான மற்றும் நிலையான வாழ்வாதாரத்தைப் பெறுவதோடு, சமூகத்தில் ஓர் அங்கமாக இயங்கி வருகின்றனர் என மாவட்ட ஆட்சியர் ரெ. சதீஷ் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!