News November 9, 2025
தர்மபுரி இரவு ரோந்து காவலர் விபரம்!

தர்மபுரி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று (08.11.2025) இரவு நேர ரோந்துப் பணியில் ஈடுபடும் காவல் ஆய்வாளர்கள் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆய்வாளர், பாலகிருஷ்ணன் தலைமையில், அதியமான்கோட்டை பகுதியில் நெடுஞ்செழியன் , தோப்பூரில் கேசவன் , மதிகோன்பாளையத்தில் திருப்பதி மற்றும் ஆகியோர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவார்கள். பொதுமக்கள் அவசர உதவிக்கு இவர்களை அணுகலாம்.
Similar News
News November 9, 2025
தருமபுரி: 8th பாஸ் போதும்; ரூ.58,000 சம்பளத்தில் அரசு வேலை

தமிழ்நாடு நெடுஞ்சாலை துறையில் மாவட்ட வாரியாக அலுவலக உதவியாளர் மற்றும் அலுவலக காவலர் போன்ற காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு 8ம் வகுப்பு தகுதிபெற்று, 18 வயது பூர்த்தி அடைந்தவர்களாக இருக்கவேண்டும். மாத சம்பளமாக ரூ.15,700 – ரூ.58,100 வழங்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் <
News November 9, 2025
தருமபுரி: தண்டவாளத்தில் இறந்துகிடந்தது மாணவரா!

தருமபுரி, பாலக்கோடு ரயில் நிலையம் அருகே கடந்த இரு தினங்களுக்கு முன்பு தண்டவாளத்தில் இளைஞா் ஒருவா் இறந்துகிடந்தாா். இறந்தது யாா், எந்த ஊரை சோ்ந்தவா் என போலீசார் விசாரணையில் வேலூா் மாவட்டம், குடியாத்தம் பகுதியைச் சோ்ந்த கௌதம்குமாா் (18) என்பதும், அவா் தருமபுரி அருகே உள்ள தனியாா் கல்லூரியில் படித்து வந்ததும் தெரியவந்தது. அவா் எவ்வாறு இறந்தாா் என பாலக்கோடு போலீஸாா் தொடா்ந்து விசாரித்து வருகின்றனர்.
News November 9, 2025
இருசக்கர வாகனத்திலிருந்து விழுந்து இளைஞர் படுகாயம்

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி வட்டம் பி பள்ளிபட்டி ஊராட்சிக்கு உட்பட்ட கும்பாரஅள்ளி அடுத்த வாசிக்கவுண்டணூர் கிராமத்தில் இன்று (நவ8)இருசக்கர வாகனம் ஓட்டி வந்த இளைஞர் படுகாயம் அடைந்தார்.இந்த சம்பவம் குறித்து பொதுமக்கள் விரைந்து வந்து முதல் உதவி செய்து உறவினருக்கு தகவல் அளித்த பின்னர் பாப்பிரெட்டிப்பட்டி அரசு மருத்துவ மனைக்கு அழைத்து சென்றார்.அதிஷ்ட வசமாக உயிர் தப்பினார்


