News February 23, 2026
தர்மபுரி: அரூரில் கட்சிகள் மோதலால் பரபரப்பு!

அரூரில் நேற்று முன் தினம் பாஜக பட்டியல் அணி சார்பில் தமிழ்நடு அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது, விசிக தலைவர் திருமாவளவனை விமர்சித்து பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அங்கு திரண்ட விசிகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது, இருதரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. இதுகுறித்த புகாரின் பேரில், 70 பேர் மீது அரூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
Similar News
News February 26, 2026
தருமபுரி: அனைத்து CERTIFICATES இனி Whatsapp-ல்!

தருமபுரி மக்களே.., பிறப்பு சான்றிதழ், வீட்டு வரி, குடிநீர் வரி, இறப்பு சான்றிதழ் உள்ளிட்ட 50 வகையான அரசு சேவைகள் மற்றும் சான்றிதழ்களை வீட்டிலிருந்தே பெறும் வசதியை அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. எங்கேயும் அலையாமல், வீட்டில் இருந்தே 7845252525 என்ற WHATSAPP எண்ணிற்கு ஒரு HI மட்டும் அனுப்பி, இந்த சேவைகளைப் பயன்படுத்தலாம். நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!
News February 26, 2026
தருமபுரி ரயில் நிலையத்தில் 12 கிலோ கஞ்சா பறிமுதல்

தருமபுரி மாவட்டத்தில், ரயில் மூலம் கஞ்சா கடத்தப்படுவதைத் தடுக்க போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது தருமபுரி ரயில் நிலையம் அருகே கேட்பாரற்று கிடந்த பையைச் சோதனை செய்ததில் 12 கிலோ கஞ்சா சிக்கியது. போலீசாரைக் கண்டதும் கடத்தல்காரர்கள் பையைப் போட்டுவிட்டுத் தப்பியோடியது தெரிந்தது. இதுகுறித்து தருமபுரி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
News February 26, 2026
தருமபுரி அருகே மொபட் மோதி டிரைவர் பலி

தருமபுரி மாவட்டம், பென்னாகரம் பளிஞ்சரஅள்ளியைச் சேர்ந்த முருகன் (50) என்ற டிரைவர், மின்வாரிய அலுவலகம் அருகே சாலையில் நடந்து சென்றபோது மொபட் மோதி பலத்த காயமடைந்தார். தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து பென்னாகரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


