News March 24, 2024
தர்மபுரி அருகே சோகம்

பாலக்கோடு ஜோதி அள்ளியை சேர்ந்த விவசாயி ராஜீ 55. இவரது மனைவி சாலம்மாள் . குடிப்பழக்கம் உடைய ராஜீக்கு அல்சர் ஏற்பட்டு அவதிப்பட்டு வந்தார். மனைவி குடிக்க வேண்டாம் என கண்டித்துள்ளார். மனமுடைந்த ராஜி நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். பாலக்கோடு போலீசார் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News October 27, 2025
பெற்றோர் திட்டியதால் மாணவன் விஷம் குடித்து தற்கொலை

கம்பைநல்லூர் மஞ்சமேடு பகுதியை சேர்ந்தவர் பச்சியப்பன் இவரது மகன் சதீஷ் (14), 11ம் வகுப்பு படித்து வந்தார். வீட்டில் இருந்த சதீஷ் பீடி குடித்துள்ளான். இதனை பார்த்த அவரது தாய், மகனை கண்டித்துள்ளார். இதனால் மனவேதனையில் இருந்த அவர் கடந்த 18 ஆம் தேதி வீட்டில் விஷத்தை குடித்த அவரை உறவினர்கள் மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அக்.25 உயிரிழந்தார்.
News October 27, 2025
தர்மபுரி மாவட்ட காவல்துறை இரவு ரோந்து விபரம்

தருமபுரி மாவட்டம் முழுவதும் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு இரவு 12 மணி முதல் காலை 6 மணி வரை ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்களின் விவரம் மாவட்ட காவல் துறையால் வெளியிடப்பட்டுள்ளது. ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்களின் விவரம் மற்றும் தொடர்புக்கொள்ள தொடர்பு எண்கள் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு 100 அல்லது 04342-233850 உதவி எண்ணை தொடர்பு கொள்ளவும். இதை அனைவருக்கும் ஷேர் செய்யவும்!
News October 26, 2025
தருமபுரி: 10th போதும், அரசு வேலை!

மத்திய அரசின் ஏகலைவா மாதிரி உண்டு உறைவிடப் பள்ளிகளில் 7,267 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. பள்ளி முதல்வர், ஆசிரியர்கள், செவிலியர், விடுதிக்காப்பாளர், செயலக உதவியாளர், கணக்காளர் போன்ற பணிக்கு விண்ணப்பிக்கலாம். இதற்கு 10th, +2, டிகிரி, பி.எட் & நர்சிங் படித்தவர்கள்<


