News March 31, 2024
தர்மபுரி அருகே குடியிருப்பில் புகுந்த சாரை பாம்பு!!

தர்மபுரி வட்டம், குமாரசாமி பேட்டை அடுத்த வேப்பமரத்து கொட்டாய் ,பகுதியில் உள்ள பெருமாள் என்பவரின் வீட்டில் நேற்று சுமார் 4 அடி நீளமுள்ள சாரை பாம்பு ஒன்று புகுந்ததாக தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு நிலைய அலுவலர் (போ)
பா.வெங்கடேசன் தலைமையிலான குழு பாம்பு பிடிக்கும் கருவிக்கொண்டு உயிருடன் பிடித்து வனத்துறையுடன் ஒப்படைத்தனர்.
Similar News
News February 18, 2026
தருமபுரியில் EB பில் எகிறுதா..?

தருமபுரி மக்களே உங்க கரண்ட் பில் அதிகமா வருதா..? <
News February 18, 2026
தருமபுரியில் வாலிபர் துடிதுடித்து பலி!

பென்னாகரம், மங்கம்பட்டியை சேர்ந்தவர் ராகேஷ் (19). இவர் உத்தனப்பள்ளியில் வேலை செய்து வந்தார். உடல் நலக்குறைவால் அவதிப்பட்ட அவர் சிகிச்சை பெற்றும் குணமாகத்தால் மனமுடைந்து காணப்பட்டார். இதனால் விஷம் குடித்து தற்கொலை முயற்சி செய்த இவர், கிருஷ்ணகிரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி ராகேஷ் இறந்தார். இது குறித்து உத்தனப்பள்ளி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
News February 18, 2026
தருமபுரி: மாணவன் அதிர்ச்சி முடிவு! திடுக்கிடும் பின்னணி!

தருமபுரி மாவட்டம், இருமத்தூர் அருகே உள்ள அரசு பள்ளியில் பயிலும் 12-ஆம் வகுப்பு மாணவர் ஒருவரை, அங்குள்ள உடற்கல்வி ஆசிரியர் குச்சியால் சரமாரியாக தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான அந்த மாணவர், தற்கொலை செய்துகொள்ளும் நோக்கில் அரளி விதையை அரைத்துக் குடித்துள்ளார். இந்நிலையில் மாணவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.


